தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றபட்டிருகின்றார், தமிழகத்துக்கு புதிய ஆளுநர் அறிவிக்கபடவில்லை மாறாக கேரள ஆளுநர் ராஜேந்திர கர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என அறிவிக்கபட்டிருக்கின்றது
தமிழகத்தில் எத்தனையோ ஆளுநர்கள் இருந்தார்கள் ஆனால் மிக சரியான இந்தியனாக, இந்துவாக நின்ற முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரின் இந்த 5 ஆண்டு கால ஆளுநர் பதவி என்பது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானது
மிக பொறுப்பான ஆனால் கண்டிப்பான ஆளுநராக இருந்தார், தேசியகீதம் பாடுவது முதல் தமிழக திமுக அரசின் பொய்களை ஏற்கமுடியாது, ஆளுநருக்கான தேசிய அதிகாரத்தில் இருந்து இறங்கிவர முடியாது என்பது வரை மிக தைரியமாக நின்றார்
தமிழ் பேச கற்றுக்கொண்ட அவர் தமிழக ஆலயமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார், இந்துக்களுக்கு ஏற்படும் பெரிய நெருக்கடிகளில் அவர் பக்கபலமாகவே இருந்தார், மயிலாடுதுறை ஆதீன பல்லக்கு விவகாரம் முதல் சிதம்பரம் தீட்சிதர்களுக்கான சிக்கல் வரை நேரில் சென்றார்
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தேசப்பற்றை விதைத்தார், திராவிட பொய்களை சாட அவர் தயங்கியதே இல்லை, தான் ஒரு இந்தியன் இந்நாட்டின் மரபினை பேணும் இந்தியன் என்பதில் சரியாக இருந்தார்
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவருக்கும் அரசுக்கும் இடையே பெரும் போர் நடந்தது, ஆனால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி திமுக அரசை கலைக்கவில்லை மாறாக நியாயமான போராட்டத்தினை மட்டும் மேற்கொண்டார்
அவருடனான எல்லா போராட்டத்திலும் திமுக தோற்றுக்கொண்டே இருந்தது, அதனுடனான சட்டப்போரில் அதன் அராஜகமான குற்றச்சாட்டுகளின் தாக்கத்தில் ஆளுநரே வென்றார்
திமுக அரசு அவரிடம் பகிரங்கமாக தோற்றது, ரவி தமிழகத்தில் இருந்தவரை திராவிட இம்சை கும்பலுக்கு சிங்கமென நின்றார், பாரதி உள்ளிட்டோரை அவர் கொண்டாடிய விதமும், ராஜ்பவனில் அவர் நவராத்திரி கொண்டாடும் விதமும் நன்றிக்குரியது
இப்போது மேற்குவங்கத்தில் அவர் பணி தேவைப்படுவதால் அவர் அங்கு மாற்றப்படுகின்றார் காரணம் அவர் உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பில் அனுபவமுள்ள ஐபிஎஸ் என்பதால் இப்படி தேசப்பணிக்காக அனுப்பப்படுகின்றார்
இன்னொரு வகையில் பார்க்கப்போனால் தமிழகத்தின் மிக முக்கிய பணிக்காக அவர் அனுப்பப்பட்டார், அந்த பணி முடிந்து அடுத்து இனி திமுக ஆட்சியும் இல்லை என்பதால் நகர்த்தப்பட்டாரா எனும் கேள்வியும் எழும் அதை தவிர்க்க முடியாது
மிக சிறந்த இந்தியனாக, தேசாபிமானியாக தமிழகத்துக்கும் தமிழுக்கும் இந்து ஆலயங்களுக்கும் காவலனாக, உண்மையான வரலாற்றை எடுத்து சொல்லும் மிகசிறந்த தர்க்கவாதியான அவரின் ஐந்தாண்டு கால சேவைக்கு நன்றிசொல்லி அவர் எங்கிருந்தாலும் தேச சேவை செய்யட்டும் என வாழ்த்தி அனுப்புகின்றது தமிழகம்
ஒரு ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதிவிட்டு சென்றிருக்கும் அவருக்கு எக்காலமும் நன்றிகள், அடுத்துவரும் ஆளுநரும் அவரின் அடிசுவட்டை பின்பற்றி நாட்டுக்கும் மண்ணுக்கும் அதன் ஆதார தர்மத்துக்கும் காவல் இருக்க பிரார்த்திப்போம்
- பிரம்ம ரிஷியார்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க #🔶பாஜக #🙋♂️அண்ணாமலை