நஜிராஅமான்
567 views
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் முக்கியமான முருகன் தலமாகும் திருவிடைகழி இங்குள்ள முருகன் கோயில் தெய்வானையுடன் காட்சி தரும் முருகப்பெருமானை வழிபடுவதால் நல்ல திருப்பங்களும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது இந்த தளத்தில் சிவன் சன்னதியும் உள்ளது மேலும் இது விடை கழி என பெயர் பெற்றதற்கு காரணம் தெய்வானை முருகனிடம் விடை கேட்டதும் முருகன் சூரனை வதம் செய்த பாவங்கள் நீக்கியதும் ஆகும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூருக்கு அருகில் இத்தலம் உள்ளது முருகப்பெருமான் சிவன் சன்னதியுடன் தனி விமானங்களுடன் அருள் பாலிக்கிறார் தரித்திரம் விலக செல்வ வளம் ஏற்பட திருமணம் கைகூடி வர குழந்தை பாக்கியம் ஏற்பட தீராத கடன் தீர முருகன் வழிபாடு நன்மையை தரும் என்பது நம்பிக்கையான ஐதிகம் இது திருமறைகளில் இடம்பெற்றுள்ள ஒரு முருகன் தலமாகும் அறுபடை வீடுகளுக்கு வெளியே முருகன் பாதங்கள் பதித்த தலங்களில் இதுவும் ஒன்று முருகனை வழிபடுவோம் நல் முன்னேற்றம் அடைவோம் #ஆன்மீகம்