#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
உளி கொண்டு தேவதையவள்
உருவை செதுக்கினால்
பொன்னுடல் நோகுமென்று
சிற்பியை தவிர்த்துவிட்டேன்
என்னவள் அங்கங்களை அவன்
எழுதக் கூடாதென்று
ஓவியைனை மறுத்து விட்டேன்
பின் அவள் உருவத்தை எப்படி
பெறுவதென யோசித்தேன்
என்னிரு கண்களால் பிரதியெடுத்து உள்ளத்தில் ஒட்டிக் கொண்டேன்
வேறுவழியில் எனக்கு உடன் பாடில்லாததால்