*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ்
பாகம்-4
விறகுக் கட்டுகளைத் தலையில் சுமந்து கொண்டு பெர்னதெத், தங்கை மேரி அந்துவானத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஜேன் அபதி இதை யாரிடமாவது சொல்லத் துடித்தாள். அவள் துடுக்கானவள்! வாயாடி! வீட்டுக்குச் செல்லும் வழியில், கதை அளப்பதில் வல்லவளான ஒருத்தியை சந்தித்தாள். அவளிடம் ஒரு செய்தியை சொன்னால் போதும் ஊர் முழுவதும் பரவி விடும். இந்தப் புண்ணியவதியிடம் ஜேன் அபதி மூச்சு விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தாள். காட்டுத் தீ பரவுவது போல் லூர்து நகர் முழுவதும் இச்செய்தி பரவி விட்டது. சில தினங்களுக்குள் பிரான்ஸ் நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் பரவி விட்டது.
ஆபிரு வீடு ஒரே ஒரு அறை மட்டும் உள்ள பழைய வீடு, சுவர்களில் நீர் கசிவது போல் இந்தச் செய்தியும் வீட்டுக்குள் கசிந்தது. மேரி அந்துவானத்துக்கு இச்செய்தியை மனதிற்குள் அடக்கி வைக்க மூடிய வில்லை. பெர்னதெத் பேசாமல் ஒரு விதமாக இருப்பதைப் பார்த்த தாய் லூயிசா, அந்துவானத்திடம், “பெர்னதெத் ஏன் ஒரு விதமாக இருக்கிறாள்? பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறாளே, ஏன்? அவள் நாக்கைப் பூனை திருடிக் கொண்டு போய் விட்டதா?" என்று எரிச்சலுடன் கேட்டாள்.
"அம்மா, பெர்னதெத் மசாபியேல் குகையில் ஓர் அழகான அம்மாவைப் பார்த்தாளாம். பிரகாசமான ஒளியின் நடுவே நின்றார்களாம் அந்த அம்மா..." என்று அம்மாவிடம் அனைத்தையும் ஒப்புவித்து விட்டாள் அந்துவானத். பெர்னதெத் இது என்ன கதை?” என்று கையை ஓங்கியபடி பெர்னதெத்தை அடிக்க ஓடினாள் தாய் லூயிசா,
பெர்னதெத், என் கண்னே. இப்படிப் பொய்யெல்லாம் சொல்லாதேம்மா. ஊரெல்லாம் நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும், பைத்தியக்காரி என்று ஊரெல்லாம் உனக்குப் பட்டம் கட்டும்" என்று கூறி பொனதெத்தை அணைத்துக் கொண்டாள் தாய் லூயிசா.
“நீ பார்த்த அந்த அம்மாவை மற்ற இருவரும் பார்க்கவில்லையா? அவர்கள் மசாபியேல் கெபிப் பக்கம் வரவில்லையா? என்னம்மா நடந்தது? சொல்” என்று பெர்னதெத்தீன் தலைமுடியை அன்பாகத் தடவினாள் லூயிசாசூபிரு
பிஞ்சு உள்ளமுடைய சிறுமி பெர்னதெத் அனைத்தையும் அம்மாவிடம் விளக்கமாகச் சொன்னாள். மகளின் முகத் தோற்றம், பக்திப் பரவசமான முகக்களை இவைகளைப் பார்த்து வியந்த தாய் லூயிசா, "இருந்தாலும் மகளே. நீ சுவனமாக இருக்க வேண்டும். இது நமக்குத் துன்பத்தைக் கொண்டு வரும், பேயின் தந்திரமாகக் கூட இருக்கலாம்" என்று கூறி மகளை அன்பாக எச்சரித்தாள்.
"அம்மா, பேய் நம்மை செபமாலை செபிக்கும்படி தூண்டாதே. பிதாவுக்கும் சுதனுக்கும்... என்ற செபத்தைப் பேய் சொல்லாதே. இந்த செபத்தை அந்த அம்மா வறுமையில் வாடும் சூபீரு குடும்பம் பணம் சம்பாதிப்பதற்காக மகள் மூலம் கதை சுட்டி விடுவதாகப் பலர் நினைக்கக் கூடும் எனப் பயந்த தாய் லூயிசா, பெர்னதெத், இனி மசாபியேல் குகைப் பக்கம் நீபோகவே கூடாது” என்று கண்டிப்பான ஒரு கட்டளை கொடுத்தாள்.
ஒரே ஒரு அறை மட்டும் உள்ள அந்த வீட்டில் சூபீரு குடும்பம் முழுவதும் உறங்கிக் கொண்டிருந்தது. பெர்னதெத் தூக்கமில்லாமல், தூங்க முடியாமல், மசாபியேல் குகையில் தோன்றிய அம்மாவையே நினைத்து ஏங்கி இரவெல்லாம் அழுது கொண்டிருந்தாள்.
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்