ஒரு இதயத்தில் இடம் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பது அவளுக்கு நன்கு தெரியும்........
இருந்தும் ஏனோ தெரியவில்லை அவன் இதயத்தில் அவள் பிடித்த இடத்தை வேறு யாராலும் எட்டி தொட முடியாத ஓர் இடத்தில் அவளுக்கென ஓர் இடம் உண்டு என்பதை அவள் நன்கு அறிவாள் இருந்தும் ஏனோ தெரியவில்லை அவள் தொலைவில் சென்று விடுகிறாள் ஏன் தெரியுமா இப்பொழுது எல்லாம் அவள் இதயம் நிறைய பக்குவப்பட்டு பக்குவப்பட்டு பக்குவப்படு வது என்பது அவளுக்கு உரித்தான ஒரு கலையாகவே மாறிவிட்டது ஏன் தெரியுமா அவளுக்கு எதெல்லாம் பிடிக்கும் அவளுக்கு எதெல்லாம் மிக மிக பிடிக்கும் அவளுக்கு எதன் மீது அதிக பற்றுதல் இருக்கும் என்பதை பார்த்து பார்த்து அவளிடம் இருந்து அவளுக்கு பிடித்தவற்றையெல்லாம் இந்த வாழ்க்கை அவளிடம் இருந்து பறித்து விடுகிறது இதனாலேயே அவள் இப்போதெல்லாம் எதன் மீதும் பற்றுக்கொள்வதுமில்லை அன்பு வைப்பதும் இல்லை ஆசை வைப்பதும் இல்லை நேசம் வைப்பதும் இல்லை அவ்வளவு ஏன் எதிலும் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் ஏதோ ஒரு இனம் புரியாத பக்குவம் அவளுக்குள் அவள் நேசித்தவை எல்லாம் அவளிடம் இருந்து இந்த விதி தொலைவுகளில் வைத்து சோதிப்பதே வாடிக்கையாகிவிட்டது அதனால் இப்பொழுதெல்லாம் அவள் விதியை பார்த்து நொந்து கொள்வதில்லை. நீ என்ன என்னை தொலைவில் வைத்து பார்ப்பது நானே தொலைவில் சென்று விடுகிறேன் அருகில் சென்றால் அல்லது அருகில் இருந்தால் தானே நீ என்னிடமிருந்து பறிப்பாய் நானாகவே விலகிக் கொள்கிறேன் என்று இப்பொழுதெல்லாம் அவள் பக்குவம் அவளை பக்குவப்படுத்தி பக்குவப்படுத்தி இப்பொழுது பக்குவம் என்பதெல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது இதைவிட கொடுமை என்னவென்றால் இன்பம் துன்பம் எது வந்தாலும் இப்பொழுது அவளுக்கு சம நிலையாகவே இருக்கிறது முன்பெல்லாம் மகிழ்ச்சி வந்தால் அதை ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியாக அவள் மனதிற்குள் மிதந்து கொண்டு மகிழ்வாள் அப்போதும் கூட அவள் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும் மனதிற்குள்ளேயே மகிழ்ந்து கொள்வாளே தவிர ஊரைக் கூட்டி கொண்டாடியெல்லாம் அவளுக்கு பழக்கம் இல்லை ஆரம்பத்தில் இருந்தே அவள் அப்படித்தான் வெற்றியோ தோல்வியோ எதையும் அலட்டிக் கொள்ளாத ஒரு பக்குவம் அவளுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே உண்டு அதை சிலர் திமிர் என்றும் கூறுவார்கள் உண்மையில் அது திமிர் அல்ல வெற்றி வந்தால் அலட்டிக் கொள்வதும் தோல்வி வந்தால் ஓய்ந்து ஒரு ஓரமாக தடுமாறி போவதும் நம்மை பலவீனப்படுத்திவிடும் அதனால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவள் அம்மா சிறுவயதிலேயே அவளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறாள் அதனாலேயே என்னவோ தெரியவில்லை அந்த கட்டுப்பாடு இப்போது அவளுக்கு கை கொடுக்கிறது ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் அது நமக்கு பிடித்த பொருளோ அல்லது நமக்கு பிடித்த ஒரு உறவோ அது என்னவாக இருந்தாலும் சரி நமக்கு கிடைக்காமல் போனாலும் அது ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒருவர் கையில் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு நமக்குத்தான் அன்பிற்கும் ஆசைப்பட்டதற்கும் எல்லாம் அடைய விதி ஒத்துக்கொள்ளவில்லை போகட்டும் அந்த விதி அதை இன்னும் நல்ல பாதுகாப்பான ஒரு இடத்தில் சேர்த்து இருக்கிறது என்ற ஒரு மன ஆறுதல் இருக்கிறதே அது போதும்...
#📝என் இதய உணர்வுகள்