Thangamani
531 views
AI indicator
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:1 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. சங்கீதம் 118:2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. சங்கீதம் 118:3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. சங்கீதம் 118:4 நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். சங்கீதம் 118:5 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 118:6 எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். சங்கீதம் 118:7 மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8 பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:9 எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:10 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:11 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:12 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய், கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். சங்கீதம் 118:13 கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர், அவர் எனக்கு இரட்சிப்புமானார். சங்கீதம் 118:14 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118:15 கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118:16 நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். சங்கீதம் 118:17 கர்த்தர் என்னை வெகுவாய்த்தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. சங்கீதம் 118:18 நீதியின் வாசல்களைத் திறவுங்கள், நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். சங்கீதம் 118:19 கர்த்தரின் வாசல் இதுவே, நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். சங்கீதம் 118:20 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 118:21 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. சங்கீதம் 118:22 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சங்கீதம் 118:23 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24 கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். சங்கீதம் 118:25 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். சங்கீதம் 118:26 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். சங்கீதம் 118:27 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன், நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். சங்கீதம் 118:28 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:29 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com