B. CELLIN
3.8K views
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் செபம்* *வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன்.* *இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து நன்றி கூறுகின்றேன்.* *இன்று நான் யாருடைய மனதையாவது புண்படும்படியாக நடந்து இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன். உமது அருளினால் தான், நான் இன்று பல்வேறு காரியங்களை செய்ய முடிந்தது.* *இன்று எனக்கு நீர் தந்த உணவு, உடை, பாதுகாப்பு அனைத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.* *இந்த இரவில், தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள் என் மனதில் தோன்றாமல், எம்மை ஆசீர்வதியும்.* *எமக்கு அமைதியான தூக்கம் தந்து, அதன் மூலம் நல்ல ஓய்வை கொடுத்து, நாளை புத்துணர்வோடு எழுந்து, என் பணிகளை தொடர வரம் தாரும். ஆமென்.*