நஜிராஅமான்
542 views
வாழ்வில் திடீர் தடைகள் திருமண தாமதம் தீராத நோய்களால் அவதிப்படுதல் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் புத்திர தோஷம் இதற்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக திகழ்கிறது கும்பகோணம் அருகிலுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் புராண காலத்தில் ஒரு முறை பாம்புகளின் அரசன் ஆதிசேஷன் சிவபெருமானை வழிபட விரும்பினார் ராகு மற்றும் கேது இருவரும் ஒரே உடலாக இணைந்து சிவனை நோக்கி தவம் செய்த தலம் இதுவாகும் சிவபெருமான் அருளால் ராகுவும் கேதுவும் தங்களுக்கு ஏற்பட்ட சாபங்களிருந்து விடுபட்ட இடம் இது என்பதால் இது தென்காலஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது மற்ற ராகு கேது கலங்கரை விட திருப்பாம்புரம் ஏன் தனித்து உள்ளது இங்கு ராகுவும் கேதுவும் தனித்தனியாக இல்லாமல் ஒரே உடலாக இணைந்து ஈசனை வழங்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர் இந்த ஊரில் பாம்புகள் யாரையும் கடித்ததில்லை என்றும் அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாது என்றும் அசைக்க முடியாத தீராத நம்பிக்கை இருக்கிறது இழந்த பதவி செல்வம் மற்றும் நிம்மதியை மீண்டும் பெற இத்தலம் சிறந்த இடமாக விளங்குகிறது காலசர்ப தோஷம் உள்ளவர்கள் ராகு திசை அல்லது கேது தசை நடப்பவர்கள் அவரவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டில் இந்த இடங்களில் ராகு அல்லது கேது இருப்பவர்கள் திருமணம் தள்ளிக் கொண்டே போகும் ஆண் பெண் இவர்கள் இந்த பாக்கியம் இல்லாதவர்கள் கனவில் அடிக்கடி பாம்புகளை காண்பவர்கள் கோயிலுக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு அப்படி நீராடைகளா விட்டால் கை கால்களை அலம்பிக் கொள்ளலாம் ராகு கேது சன்னதியில் வெள்ளி நாகத்திற்கு பாலபிஷேகம் செய்யப்படும் அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள ஒரு அதிசயமாகும் ராகுவுக்கு பிடித்த உளுந்து பொடி சாதம் , கேதுவுக்கு பிடித்த கொள்ளு பொடி சாதம் இவற்றை நிவேதனமாக வைத்து படைத்து வழிபட வேண்டும் ராகுவுக்கு கருப்பு அல்லது நீல நிறம் ஆடையும் கேதுவிற்கு பலவண்ண ஆடையும் அணிவித்து அர்ச்சனை செய்யலாம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது காரைக்கால் கும்பகோணம் மார்க்கத்தில் கோயில் உள்ளது காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ராகு கால நேரங்களில் இங்கே பரிகாரம் செய்வது விசேஷமானது #ஆன்மீகம்