#முஸ்லீம் மக்கள் க மக்கள் கழகத்தில் இணைந்த இளைஞர்கள் – சமூகப் பணியில் ஈடுபட உறுதி
திண்டிவனம், மார்ச் 7:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் வசித்து வருகின்ற அயாத் பாஷா அவர்களின் மூத்த மகன் முகமது ஆஸிப், இன்று (7.3.2026) சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைவதற்காக மனு வழங்கினார்.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னை முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைத்துக் கொள்ள முகமது ஆஸிப் கோரிக்கை வைத்தார்.
அவருடன் அவரது நண்பர்கள் ஆர். முகமது ரேயான்,ஷ. முகமது அஷ்ரப்,ச. அஷ்ரப் ஆகிய இளைஞர்களும் கலந்து கொண்டு, சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைந்தனர்.
இந்த இளைஞர்களின் சமூகப் பணி மேலும் வளர அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.