தீராத நோய் தீர்க்கும் கணக்கன்பாளையம் மலையாள பகவதி அம்மன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது
பக்தர்களின் காவல் தெய்வமாகவும் தீராத பின்னிட தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறாள்
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு வியாபாரி தனது மாட்டுப்பொதியில் மஞ்சள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மலைப் பாதை வழியாக வந்து கொண்டிருந்தார் ஒருபுறம் அதிகமாக இருந்ததால் மாடு தடுமாறி சென்றது பாரத்தை சமன் செய்ய ஏதேனும் கல் கிடைக்குமா என்று தேடிய வியாபாரிக்கு மலை காட்டிற்குள் ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது
அந்தக் கல்லை எடுத்து மாட்டுப்பொறனதியில் வைத்ததும் பாரம் சரியானது வண்டியும் சிரமம் இல்லாமல் நடந்தது கோபி அருகே உள்ள கணக்கன்பாளையம் மலை அடிவார பகுதிக்கு வந்தபோது அந்த மினுமினுப்பான கல் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டது ஆனால் வண்டியும் பாரதத்தில் இந்த மாற்றமும் இல்லை வியாபாரி அது கவனிக்காமல் சென்றுவிட்டார்
சில நாட்கள் அந்த கல் விழுந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்து விட்டது மழைக்காலத்தில் அந்த புற்றிலிருந்து ஈசல்கள் வெளிவர அதை சாப்பிட பிடிப்பதற்காக மலை அடிவாரத்தில் வசித்த வலையவன் என்பவன் அந்த புற்றை மண்வெட்டியால் வெட்டினான் அப்போது புற்றிலிருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஊர் மக்களிடம் விவரித்தான்
மக்கள் அங்கே திரண்டு வந்தபோது அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து நான் தான் மலையாள பகவதி இதே இடத்தை வைத்து எனக்கு பூஜை செய்யுங்கள் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறியதும் இன்று முதல் ஊர் பெரியவர்கள் பச்சை பந்தல் அமைத்து அந்த தாய்க்கு பூஜை செய்ய தொடங்கினர் 1915 ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இன்று பிரமாண்டமான ஆலயமாக திகழ்கிறது
இக்கோயிலில் அம்மன் சுயம் உருவாக உருவெடுத்து அருள் பாலிக்கிறார்
தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 12 நாட்கள் இக்கோயில் தங்கி நந்தா தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்
எந்த நாய் இருந்தாலும் அம்மனை நினைத்து கோயிலை சுற்றி உள்ள இலை தழைகளை பறித்து உடனே பூசிக் கொண்டால் பனிபோல் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் வியாழக்கிழமை பூச்சாற்றுதலுடன் திருவிழா தொடங்கும் இதில் பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மிகவும் விவரிசையாக நடைபெறும்
தை மாதம் பொங்கல் திருவிழா அம்மன் வீதி உலா வருகை
ஆடி வெள்ளிக்கிழமைகளில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன
அருள்மிகு
பகவதி அம்மன் திருக்கோயில் கணக்கன்பாளையம் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம்
காலை ஆறு மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும்
அம்மனை வழிபடுவோம் மகிழ்ச்சியோடு வாழ்வோம்
#ஆன்மீகம்