#Today Gospel
God has changing the times and changing the seasons.
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாக இருக்குமானால் அவனை எல்லா நாசம் மோசத்திற்கும் முன் அறிவித்து தேவன் காக்க வல்லவர்.
அக்கினி, மழை, சூரியன், சந்திரன், காற்று, கடல் இவையெல்லாம் அவர் விரும்புகிறபடி உபயோகம் செய்கிறார். "தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்" 1நாளாகமம் 29:12
1. முழு பூமியும் அழியும் போது, நீதிமான் நோவா குடும்பம் மாத்திரம் 40 நாள் இரவு பகல் மழையிலும், ஜலப்பிரலயத்திலும் காக்கப்பட்டார்கள். ஆதி 7:4
2. சொதோம் கோமாரா முழு பட்டணமும் அழிக்கும் முன் நீதிமான் லோத் குடும்பம் மாத்திரம் அக்கினி கந்தக மழைக்கு தப்பியது ஆதி 19:24
3.வறட்சியான பஞ்ச காலத்தில் ஈசாக்கு விதை விதைத்து 100 மடங்கு அறுவடை செய்தான். ஆதி 26:12
4.யோசுவா எமோரியரோடு யுத்தம் பண்ணுகையில் சூரியனும் சந்திரனும் அஸ்தமனம் ஆகாதாபடி நிற்கும் படி செய்து கல்மழை வருவித்து அவர்களை கர்த்தர் நிக்கிரகம் செய்தார்.
5. உத்தமன் எசேக்கியாவுக்கு மனமிறங்கி 15 வருடம் ஆயுசு நாட்களை கூட்டினார். 2 இராஜா 20:6
6. முழு இஸ்ரவேல் மக்களும் பின் மாற்றமாய் போக வைத்த 850 பாகால் தீர்க்கதரிசிகளை நிக்கிரகம் செய்ய வானத்திலுருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே தெய்வம் என்று இஸ்ரவேல் மக்களை மனந்திரும்பும் படி செய்தார். 1 இராஜா 18:28
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்ற வல்லவர். நம் பிரச்சனைகள் அவருக்கு முன் ஒன்றுமில்லை.