حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத் வழங்குவது, ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையை நாடுவது ஆகியவற்றுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 57
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ يَوْمَ مَاتَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ عَلَيْكُمْ بِاتِّقَاءِ اللَّهِ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَالْوَقَارِ وَالسَّكِينَةِ حَتَّى يَأْتِيَكُمْ أَمِيرٌ، فَإِنَّمَا يَأْتِيكُمُ الآنَ، ثُمَّ قَالَ اسْتَعْفُوا لأَمِيرِكُمْ، فَإِنَّهُ كَانَ يُحِبُّ الْعَفْوَ. ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ، فَإِنِّي أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قُلْتُ أُبَايِعُكَ عَلَى الإِسْلاَمِ. فَشَرَطَ عَلَىَّ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. فَبَايَعْتُهُ عَلَى هَذَا، وَرَبِّ هَذَا الْمَسْجِدِ إِنِّي لَنَاصِحٌ لَكُمْ. ثُمَّ اسْتَغْفَرَ وَنَزَلَ.
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் வாயிலாக ஸியாத் பின் இலாக்கா அறிவிப்பதாவது:
அல்-முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இறந்த தினத்தில், ஜரீர் (ரலி) அவர்கள் (மிம்பரின் மீது) எழுந்து நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
“இணையில்லாத தனி ஒருவனான அல்லாஹ்வையே அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களிடம் (புதிய) தலைவர் வரும்வரை கண்ணியத்துடனும் அமைதியாகவும் இருங்கள். ஏனெனில், இப்போது அவர் உங்களிடம் வந்துவிடுவார். உங்கள் (மறைந்த) தலைவருக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் அவர் மன்னிப்பை விரும்புபவராக இருந்தார்.”
பிறகு கூறினார்கள்: “அம்மா பஃது (இறைவாழ்த்துக்கும் புகழுக்கும் பிறகு)! நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இஸ்லாத்தின் அடிப்படையில் தங்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்கிறேன்’ என்று கூறினேன். அப்போது அவர்கள், ‘ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நல்லெண்ணம் நாட வேண்டும் (நன்மையை விரும்ப வேண்டும்)’ என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் பைஅத் செய்தேன். இந்தப் பள்ளிவாசலின் இறைவன் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உங்களுக்கு நல்லெண்ணம் கொள்பவனாகவே இருக்கிறேன்.”
பிறகு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிவிட்டு (மிம்பரிலிருந்து) இறங்கினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 58
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗