Anthonysamy
999 views
३१ ह व्ह्यू · ५९० प्रतिक्रिया | 2005ல் சேலம், எடப்பாடியில் நகர அரசு மருத்துவமனை கட்டுமான பணி துவங்கும் போது, அந்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த சுமார் 18 குடும்பங்களை, அரசு நிர்வாகம் அப்புறப்படுத்தியது, அப்போது அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக அரசு உறுதியளித்தது. அதை தொடந்து அந்த பகுதியில் வசித்த விளிம்பு நிலை மக்கள் அடையாளம் கண்டு, அந்த 18 குடும்பங்கள் உட்பட சுமார் 130 குடும்பங்களுக்கு 17.11.2006 அன்று, சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பட்டா வழங்கப்பட்டது, அந்த நிகழ்வில் அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு பட்டாவையும், அதற்குறிய லேஅவுட்டும்(Lay-Out Sketch) பயனாளிகளுக்கு வழங்கினார். ஆனால் அரசு பட்டா கிடைத்தும் அங்கு குடியேறமுடியாமலும், மாற்று இடம் கிடைக்காமலும், சுமார் 19 ஆண்டுகளாக, இன்று வரை தெருவோரமாக சாரம் கட்டியும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர் அந்த பயனாளிகள். இது குறித்து, அறப்போர் இயக்கம், RTI தொடுத்து, உரிய விவரங்களை பெற்று 06.06.2022 அன்று, அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம் IAS அவர்களை, பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரில் சந்தித்தோம். உரிய நடடிக்கை மேற்கொள்ள அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தபட்டார். அதற்கு பிறகு, மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார், தனித் தாசில்தார், BDO மற்றும் VAO உட்பட பலரையும் தொடர்ந்து அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரினோம். பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய புதிய பட்டா மற்றும் இடம் கிடைக்காத நிலையில் 21.04.2023 அன்று மற்றும் 25.04.2023 மீண்டும் மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம் IAS அவர்களை சந்தித்தோம். இரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதற்கு பிறகு, மீண்டும் மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார், தனித் தாசில்தார் BDO மற்றும் VAO அவர்களை சந்தித்து உரிய ஆவண முயற்சிகளை பின் தொடர்ந்தோம். பல்வேறு காரணங்கள் கூறி அலைகழிக்கப்பட்டோம், ஆனால் இன்று வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பட்டா மற்றும் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலை குறித்து தெரியப்படுத்த தற்போதைய மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி, ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்திக்க முயற்சி செய்தோம். தொலைபேசியில் முயற்சி செய்தோம். மின்அஞ்சல் வழியாக முயற்சி செய்தோம். பலன் தரவில்லை. இறுதியாக 28.11.2025 அன்று சந்தித்த நிலையிலும், விவரங்கள் முழுமையாக கேட்கப்படாமல், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எப்போதும் கூறப்படும் வார்த்தை மட்டுமே கூறப்பட்டது. எனவே, அறப்போர் இயக்கம் கோருவது, பாதிக்கபட்ட பயனாளிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உரிய புதிய பட்டாவும், அதற்குரிய இடமும் வழங்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கோருகிறது. Chief Minister of Tamil Nadu இது விவரம் பற்றிய காணொளி : #Arappor #salem | Arappor - அறப்போர் இயக்கம்
2005ல் சேலம், எடப்பாடியில் நகர அரசு மருத்துவமனை கட்டுமான பணி துவங்கும் போது, அந்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த சுமார் 18 குடும்பங்களை, அரசு...
https://www.facebook.com/share/v/1AWTZQh7z8/ #வைரல் வீடியோ