N Murugesan
462 views
நேற்று காலை நெட்பிளிக்ஸில் வைகிங் (The Vikings - serial) படம் பார்த்தேன். மாலையில் இந்த கதீஜா ரஹ்மான் பாடிய "அன்பென்ற மழையிலே.." பாடலை கேட்க நேர்ந்தது!! அப்போது இந்த பாடலின் உண்மையான மகத்துவம் புரிந்தது!! What a contrast!! இயேசுபிரானின் அவதார பெருமையை உணர வேண்டுமானால் நீங்கள் வைகிங் படமும் பார்க்க வேண்டும்!! 😄😂 https://youtu.be/qcHQGO2WMjE?si=U03itzP3XA682j-W ************************************************ வைகிங் காலத்தில் ஒரு பக்க மேற்கத்திய கலாச்சாரம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருந்தது என்பதை காண அதிர்ச்சியாக இருந்தது. நான் கிமு 1000 காலத்து கதை என்றே நினைத்தேன்!!😄 ஆனால், கதை நடந்தது கிபி 750!! அந்த காலகட்டத்தில் நமது கலாச்சாரம் எந்த நிலையில் இருந்தது தெரியுமா?! தமிழர்கள் வெறும் தற்பெருமை பேசுபவர்கள் என்று நினைப்பவர்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும். அந்த காலகட்டத்தில் நாம் ஆன்மீகம், கட்டட கலை (தஞ்சை பெரிய கோவில்), சிற்பக்கலை, விவசாயம், பொருளாதாரம், கப்பல் படை, அரசாங்க கட்டமைப்பு என்று எல்லாவற்றிலும் உன்னதத்தில் இருந்தோம்!! What a contrast!! ************************************************* படத்தை எடுத்தவர்கள் கிறிஸ்துவம் மற்றும் இயேசுவை இழிவு படுத்தியும், வைகிங்களை உயர்வாகவும் காட்சிப் படுத்தி உள்ளனர். ஆனால், வைகிங் கலாச்சார கடவுளான "ஓடினை" அடைவது எப்படி தெரியுமா?! ஏதாவது சண்டையில் வீர மரணம் அடைய வேண்டுமாம்!! (நாம் இங்கு கர்மம், யோகம், ஞானம், சைவ சித்தாந்தம் என்றெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தோம்!😄). இங்கிலாந்திற்கு எதிராக படையெடுத்து வைகிங்கள் இயேசுவை ஏளனப்படுத்தியும், எப்படி போரில் வெற்றி அடைந்தார்கள் என்று படம் போகிறது (நாமும் தான் வீரத்திற்கு பெரும் மதிப்பு கொடுத்தோம்; காட்டுமிராண்டித்தனத்திற்கு அல்ல!). ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ஒரு பாதிரியார் வேண்டுகிறார் - "இயேசுவே, நீ எங்கே போனாய்?! நாங்கள் எல்லாம் அழிய வேண்டும் என்பது தான் உன் விருப்பமா?!". நேற்று பார்த்த பகுதியில் இறுதியில் பெரும் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து மன்னர் சூளுரைக்கிறார் - "இறைவா, உன் அருளால் என்றாவது ஒரு நாள் இவர்களை பழி தீர்ப்பேன்". இந்த படம் அப்படி முடியாது என்று தான் நினைக்கிறேன். ஆனால், இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்!! அந்த ஓடின், ரக்னோராக், தோர், லோகி போன்ற கடவுள்களும், அந்த காட்டுமிராண்டி கலாச்சாரமும் எங்கே போனது?! சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துவம் முழுமையாக வெற்றி அடைந்ததால் தான் மேற்கத்திய கலாச்சாரம் அறிவியலில் முன்னேறி வளர்ந்த நாடுகளாக மாறியிருக்கிறது. ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் - வெரும் அன்பை மட்டுமே போதிக்கும் மதம், வீரமே சொர்க்கத்திற்கு வழி என்ற மதத்தை இல்லாமல் செய்து விட்டது!! அதுவே இயேசுபிரானின் அவதார மகிமை!! இந்த பாடலை அந்த காலகட்டத்தோடு பொருத்தி பார்க்கும் போது இவை அனைத்தும் புலப்படுகிறது!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம https://youtube.com/watch?v=qcHQGO2WMjE&si=xn0ZxYQ_087Ir2rd