#🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
இதில் விஷயம் என்னன்னா திமுகவை குறி வைத்து பாஜக, அதிமுக, சோ போன்றோர் ஊதிப் பெரிதாக்கப்பட்டது 2G ஊழல்.
இதனால் இரண்டு தேர்தலில் படுதோல்வி. திமுக இழந்தது நிறைய. அதைவிட தமிழ்நாடு இழந்தது மிக அதிகம்.
ஆனால் அந்த தீர்ப்பில் 2017 இல் ஆ.ராசா விடுவிக்கப்பட்டாலும் அதை அரவிந்த் கேஜரிவால், சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என குற்றம் சொன்னார். ஏன்? அன்று ஆட்சியில் திமுக இல்லை.
கடைசியாக பாஜக என்ற ரத்தக்காட்டேரி அரவிந்த் கேஜரிவாலை ஊழல் விவகாரமாக குற்றவாளியாக்கி டெல்லியில் ஆட்சியில் அமர்ந்தது. அ.கே.
அவரை கைது செய்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்தது திமுக.
இனிமேலாவது தகிடுதத்தம் செய்யும் பாஜகவை எப்படி எதிர்ப்பது என ஆம் ஆத்மி திமுகவை பார்த்து படிக்கட்டும். இது அ.கே.வுக்கு மட்டுமல்ல காங்கிரஸ், (கேரளாவில்) கம்யூனி்ஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு பாடம்.
அதென்னவோ பாஜககாரங்க சிக்க வைக்கும் ஊழல்களில் மிகச்சரியாக காய்களை நகர்த்தி சம்பந்தப்பட்டோரை கொடியவனாக, தீயவனாக, ஊழல்வாதியாக்கி காட்டுவதை உலகமே நம்புகிறது. ஆனால் அவர்களையே பாஜக வாஷிங் மெஷினில் துவைத்துவிட்டாலும் அதன் பிறகு அவரே பாஜகவில் சேர்ந்தால் அவர்களை உலகமே ஏற்கும்படியாக நம்ப வைக்கிறது.
இனிமேலாவது திருந்துங்க அரவிந்த் கேஜரிவால். பாஜகவை எதிர்க்க திமுக பாணியை கையாளுங்கள். உங்களுக்கு திமுக உதவும்.