ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
788 views
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இளவரசியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில், கணவர் மற்றும் அவரதுக் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த எஸ்.ஐ. அருண்குமார், சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் இளவரசி தூக்கில் பிணமாகத் தொங்கினார். அப்போது, மற்றொரு அறையில் குழந்தை செல்போனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், இளவரசி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "நான் செல்கிறேன். குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நன்றாக படிக்க வையுங்கள்" என்று பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. இளவரசியின் மரணம் குறித்துத் தகவல் அறிந்த உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இளவரசியைக் கொன்று தூக்கிலிட்டு நாடகமாடி இருப்பதாகச் சந்தேகம் எழுவதாகவும், இளவரசி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மறியல் குறித்துத் தகவல் அறிந்து வந்த விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் தலைமையிலானப் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் #📺டிசம்பர் 16 முக்கிய தகவல் 📢 #😌வரதட்சணை கொடுமை😭