நஜிராஅமான்
530 views
திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் சித்தர் பீடம் திருக்கோயிலில் ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமான பூஜை முறை கடைப்பிடிக்கப்படுகிறது இங்குள்ள சித்தரின் ஆற்றல் மிகவும் சக்தி வாய்ந்தது தூய்மையை காக்கவும் சித்தர்களின் நிஸ்ட்டை கலைந்து விடக்கூடாது என்பதற்காக அர்ச்சகர்கள் தங்கள் வாயை துணியால் கட்டிக்கொண்டு மௌனமாக பூஜை செய்கிறார்கள் சித்தர் கோரக்க நாதரின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவருக்கு பணிவிடை செய்தவர் பட்டாணி ராவுத்தர் இவர்களது மதம் கடந்த நட்பை போற்றும் வகையில் பட்டணி ராவுத்தருக்கு தனி சன்னதி உள்ளது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு மதத்தினரும் சேர்ந்து வணங்கும் ஒரு மத நல்லிணக்க தனமாக இது விளங்குகிறது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையான ஐதீகம் அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு பட்டாணி ராவுத்தர் நினைவாக இன்றும் இப்பகுதி மக்கள் இந்துக்கள் உட்பட பட்டன் ராவுத்தர் போன்ற பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள பழமையான புளிய மரத்தின் அடியில் அமர்ந்துதான் கோரக்க நாதரும் பட்டாணி ராவுத்தரும் தவம் செய்ததாக கூறப்படுகிறது காசியை விட வீசம் அதிகம் என்று போற்றப்படும் தலமாக திருப்புவனத்தில் மதம் கடந்த ஆறுவாளிக்கும் இந்த சித்தர் பீடத்தை தரிசிக்க தீமை விலகி நன்மைகள் #ஆன்மீகம் உண்டாகும்