சேகர்
670 views
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை 🌹 இன்று எதுவும் எழுத வேண்டாம் என்ற முடிவோடு இந்நாளை கடந்துவிட நினைக்க என் முன்னே அவள் வந்து நின்று இன்று என் நினைவு வரவில்லையா உனக்கு என்றாள் ஏன் என்ற வினாவோடு அவளைப் பார்க்க இவ்வளவு நேரம் வரை காத்திருக்க நீ எதுவும் எழுதாமல் இந்நாள் முடியப் போகிறதே அதன் கேட்டேன் என்றாள் அதோடு முடிக்கவில்லையவள் என் கவிதைகளில் எல்லாம் நீ மட்டுமே என்று சொன்ன தெல்லாம் பொய்தானே என்றும் கேட்டு வைத்தாள் உண்மைதான் நான் சொல்லும் பொய்யையெல்லாம் அவள் உண்மை என்று எடுத்துக்கொண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும் கவிதையில் பொய் சகஜம் தானே சொல்லுங்கள் கவிஞர்களே இவளிடம் வேண்டாம் வேண்டாம் நானே சொல்லிக் கொள்கிறேன் அவளைப் பார்த்ததும் உங்கள் புனைசுருட்டு வேலை எனக்கு எதிராக மாறிவிடக் கூடும்