நஜிராஅமான்
1.1K views
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தமிழ்நாட்டில் எத்தனையோ சிவா தலங்கள் இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை மிகவும் சிறப்புடையது இங்கு உள்ள நடராஜர் சிலையும் அதை சுற்றி நடக்கும் நிலைகளும் அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட மிகப்பெரிய பெரும் மர்மம் இங்குள்ள நடராஜர் சிலை சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது விலைமதிப்பற்ற தூய பச்சை மரகத கல்லால் ஆனது இவ்வளவு பெரிய மரகத சிலை வேறு எங்குமே காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது மரகத முறை மென்மையான கல் இது ஒலி ஒளி மற்றும் காற்று ஆகியவற்றின் அதிர்வுகளால் விரிசல் அடைய வாய்ப்பு உள்ளது இந்த சிலையை பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும் மேலதாளங்கள் கூட இந்த சிலைக்கு அருகில் இசைக்கக் கூடாது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் அன்று காலை படும் அன்று ஒரு நாள் மட்டுமே பச்சை நிற மரகதமேனியில் தரிசிக்க முடியும் அப்போது சிலையின் மீது சூரிய ஒளி படும்போது சிலை உயிருடன் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் மிக நுணுக்கமாக கவனித்தால் சிலையின் உடலில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற நரம்புகள் தெரிவதை இன்றும் காணலாம் இதுதான் இந்த சிலையின் மிகப்பெரிய அதிசயம் மரகத சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும் போது அந்த புனித நீர் மற்றும் சந்தனம் பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்தாகும் குறிப்பாக சிலையிலிருந்து எடுக்கப்படும் பழைய சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது மண் தோன்றிய போது மங்கை தோன்றியது என்பது இக்கோயிலின் பழமை சொல்லும் வாசகம் அதாவது பூமி உருவான காலத்தில் இருந்தே இந்த தலம் இருப்பதாக நம்பப்படுகிறது ராவணன் ஈசனை வழிபட்டு வரங்களை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன அறிவியல் விதிகளையும் தாண்டி நம் முன்னோர்களின் சிற்பக்கலையும் ஆன்மீக ரகசியமே இந்த மரகத நடராஜர் சிலையில் ஒளிந்துள்ளது வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய அற்புதமான தரிசனம் ஈசனை வழிபடுவோம் ஈசன் அருளை பெறுவோம் #ஆன்மீகம்