⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
517 views
1 days ago
*ஏப்ரல் 05,* *ஜெகஜீவன்ராம்* இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜெகஜீவன்ராம் 1908ம் ஆண்டு ஏப்ரல் 05ம் தேதி பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் பிறந்தார். தீண்டத்தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. இதை சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ம் ஆண்டில் ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் தன்னுடைய 78வது வயதில் (1986) மறைந்தார். #இந்திய வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா #வரலாற்றில் இன்று