#நம் வாழ்வில் பிரச்சனை
நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை மட்டுமல்ல, பிரச்னைக்குரிய நபர்களையும் தூரத்தில் வையுங்கள், நிம்மதி என்றும் உங்கள் அருகில் நிலைத்திருக்கும்.
கோபத்தை உங்களின் கேடயமாகவே பயன்படுத்துங்கள்.ஒரு போதும் ஆயுதமாக கோபத்தைப் பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே வாழுங்கள், வாழ்க்கை சிறந்த ஆசானாக உங்களை வழி நடத்தும்.
உங்களை முந்திச் செல்பவர்களைக் கண்டு கலங்காதீர்கள். உங்களுக்கான வெற்றியை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும் துவளாதீர்கள்.
இவ்வுலகில் தூற்றுவோர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.
அவர்களையெல்லாம் அடக்க முடியாது, அவர்களை கண்டு கொள்ளாமல் நம் வேலைய பார்த்து கொண்டு இருந்தால் வெற்றி நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."
*இனிய இரவு வணக்கம்