திருச்சி அருகே கொள்ளிடம் கரையில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற திருத்தலம் அன்பில் இங்கு எழுந்து உள்ளார்
அருள்மிகு சத்திய வாகீஸ்வரர் மற்றும் செவி சாய்த்தவிநாயகர் இக்கோயிலின் மிக முக்கியமான அம்சம் திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தில் அக்கறையிலிருந்து இத்தளத்தில் இறைவனை பாடினார் அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரால் கோவிலுக்கு வர முடியவில்லை
தூரத்தில் இருந்தபடியே சம்பந்தபாடிய தேவார பாடல்களை சிவபெருமானின் மூத்த பிள்ளையான விநாயகர் தனது யானை காதுகளை சாய்த்து ஒரு காலை மடக்கி அமர்ந்து மிக ஆர்வமாக கேட்டாராம் என்றும் அந்த விநாயகர் சிலையில் ஒரு காது சாய்ந்து பாட்டை கேட்கும் அழகை தோற்றத்தை காணலாம்
இத்தால இறைவன்
சத்தியவாகீஸ்வரர் ஒரு சுயம்புலிங்கம் ஆகும் பிரம்மா வழிபட்டதால் இவருக்கு
பிரம்மபுரி ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு
முதலில் மாட கோயிலாக இருந்தது சோழன் காலத்தில் கற்கோயிலாக மாற்றப்பட்டது சிவாலயங்களில் இது 57 ஆவது தேவார தலம் ஆகும் சம்பந்த மற்றும் அப்பர் பெருமானார் பாடல் பெற்ற ஸ்தலம்
இங்குள்ள சப்த மாதர் பிச்சாடனர் பிரம்ம வழிபட்ட சிற்பங்கள் மிகவும் நுணுக்கமானவை
செவி குறைபாடு நீங்கி காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள் அல்லது காது தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள செவி சாய்த்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபட குணமாகும் என்பது ஐதீகம்
காலை 6:00 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும்
அருள்மிகு சத்திய வாக்கீஸ்வரர் திருக்கோயில்
அன்பில்
லால்குடி வட்டம்
திருச்சி மாவட்டம்
#ஆன்மீகம்