arukanimembers
579 views
15 hours ago
கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை குறித்து செயல்பட்டு வருகிறார். * நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள். * கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தாசன் @ இயேசு அமலதாசன் பொது குடிநீர் குழாயை பிச்சைக்குடியிருப்பு மீன் சந்தை பகுதியில் இருந்து மாற்றிய விவகாரத்தில் ஏற்பட்ட முன் தகராறின் காரணமாக, அவர், அவரது சகோதரி மற்றும் தாயார் கடைக்கு சென்றுகொண்டிருந்த போது, குற்றவாளிகள் ஆயுதங்களுடன் கூடி வழிமறித்து தாக்கினர். * அதில் கம்பி மற்றும் அரிவாளால் பல இடங்களில் தாக்கப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் குற்ற எண் 468/2011 U/S 147,148,120(b),341,323,302 IPC இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. * அந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட 1. திருநெல்வேலி மாவட்டம் ரஜ கிருஷ்ணபுரத்தை சேர்ந்த ரவிமணி என்பவரின் மனைவி ரஞ்சிதம் 2. அழகப்பபுரம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த நவமணி என்பவரின் மகன் கண்ணன் 3. திருநெல்வேலி மாவட்டம் ராஜகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ரவிமணி என்பவரின் மகன் ஜெகன் 4. ராஜகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் பாக்யராஜ் 5. ராஜகிருஷ்ணபுரம் ரவிமணி என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் 6. ராஜ கிருஷ்ணபுரம் ரவிமணி என்பவரின் மகன் சங்கர் * ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். * நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு குற்ற வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்