G Kalaiselvi
809 views
😭கண்ணீர் கவிதை 😭 சாலையோர சாக்கடையில் காலை நேர கதிரவன் ஒளியில் வானைப் பார்த்து வளைந்து கை வளையல் குலுங்க கிடந்தது அந்தப் பிணம் ‌!! தலையில் சூடிய மல்லிகையோ வாடக் கூட மனமில்லாமல் பெண்ணவளின் முகத்தில் சரிந்து கிடந்தது !! தொலைந்து போன உறவும் தொல்லை தந்த உறவும் எங்கிருந்தோ "" மழையைக் கடன் வாங்கி "" கண்களில் கொட்டியது !! ஏன் ? இந்த விபரீத முடிவென்று கதை கதையாய் பேசி தீர்த்தார்கள் !! கட்டிய கணவன் எட்டி உதைத்தானோ ? இல்லை......... பேதையவள் தனியே வந்ததால் போதை தலைக்கேறிய காமக் கொடூரன் பெண்ணவளை‌ சூறையாடி மண்ணிற்கு பரிசளித்தானோ ? இவளுக்கு இறப்பு இப்படித் தான் என்று இறைவன் எழுதி வைத்தானா ? இல்லையென்றால் இதை விதியென்பதா ? புரியவில்லை.............. 😭😭😭😭😭 #கவிதை