꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
415 views
#🤔தெரிந்து கொள்வோம் 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 1916 இல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை ஏராளமான திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆயினும், 1942 – 1962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர். திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் வகையில் பல ஏடுகள் உணர்வாளர்களால் நடத்தப்பெற்றுள்ளன. ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பொன்னி ஏடு 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 1953 அளவில் இந்த இதழ் நிறுத்தப்பட்டது. பொன்னி இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை வெளியிட்டும் அதற்குத் தகுந்த படங்களை முகப்பில் வெளியிட்டும் இதழாசிரியர்கள் பாவேந்தர் புகழ்பரப்பியுள்ளனர். பாரதிதாசன் பரம்பரை என்ற ஓர் இலக்கிய அணி இந்த இதழின் வழி உருவானது. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அகிலன், கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், தில்லைவில்லாலன் எனப் பலர் இந்த ஏட்டில் எழுதியுள்ளனர். இந்த இதழின் ஆசிரியர்களாக இருந்து நடத்தியவர்கள் திரு முருகு சுப்பிரமணியன் அரு பெரியண்ணன்.. 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*