கவிஞர் கோபால்தாசன்
587 views
தருணம் - கோபால்தாசன் எப்போதுமே வெளியே கிளம்பும் போது எதிர் மதிற் சுவரில் இருந்து வீட்டுக்குள் வரப் பார்க்கும் பூனையைப் போல் ஓடும் ரயிலுக்குள் கைகளைத் தட்டி காசை வாங்கிக்கொண்டு ஆசீர்வதித்து செல்லும் திருநங்கைகளின் மனம் போல் ஓவியம் வரையும் போது பாதியில் தண்ணீர் சிந்தி கலைவது போலும் ஒன்று நடந்து ஒன்று நடக்காது போகும் சமயங்களில் கேட்கிறாய் எப்படி இருக்கிறாய் என்று #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை #👍உன்னால் முடியும்