சிறப்பு கட்டுரைகள்
🌅 ஞாயிறு பிரதோஷம்.. 🐂 நந்தி தரிசனம்.. வேலை தடைகள் ✨நீங்க.. வாழ்க்கை வளம் பெற.. சிவன் வழிபாடு!!
ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷம் ரவி பிரதோஷம் 🌞 மற்றும் ராகு கால பிரதோஷம் 🕉️ என்று அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ராகு காலத்துடன் சேர்ந்து பிரதோஷம் வருவதால் இப்பெயர்கள் ஏற்பட்டன.
இந்த சிறப்பு வாய்ந்த நாளில் வேலை தேடுபவர்கள் 💼, பதவி உயர்வு வேண்டுபவர்கள் 📈, அரசு வேலை பெற விரும்புபவர்கள் 🏛️ சிவபெருமானுக்கு 🕉️ இளநீர் அபிஷேகம் 🥥 செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
🌞 சூரிய பகவான் அருள் பெற:
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் 🌞 வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் அன்று சிவபெருமானுடன் 🕉️ சூரிய பகவானையும் 🌞 வழிபட்டால் வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
✅ செய்ய வேண்டியவை :
பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு 🕉️ இளநீர் அபிஷேகம் 🥥 செய்யுங்கள். இதனால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து நல்ல வேலை கிடைக்க வழி செய்வார் என்பது நம்பிக்கை 🙏.
பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் சன்னதியில் அமர்ந்து 🛕, உங்களுக்கு வேண்டிய வேலை கிடைக்க மனதார தியானம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள் 🙏.
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் தவறாமல் வழிபாடு செய்யுங்கள் 🔔. ஒரே ஒரு இளநீர் அபிஷேகம் செய்தாலும் பல மடங்கு பலன்கள் கிடைக்கும் ✨.
🏠 கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள்,
வீட்டிலேயே சிவலிங்கம் 🕉️ வைத்திருந்தால் அந்த சிவலிங்கத்திற்கு இளநீர் அபிஷேகம் 🥥 செய்து வழிபடலாம்.
அபிஷேகம் செய்தபின் சிவபெருமானுக்கு தீபமேற்றி 🪔 சிவபெருமானின் மூல மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும் 📿. பின் வேலை தொடர்பான உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து மனதார வழிபடுங்கள் 🙏.
பிறகு தீப, தூப ஆராதனை 🪔🌸 காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
🐂 நந்தி தேவர் வழிபாடு:
நந்தி பகவான் 🐂 சிவபெருமானின் 🕉️ வாகனம் ஆவார். கைலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார் 🏔️.
இவர் அனுமதி பெறாமல் ஈசனின் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது 🚪. எனவே தான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது நம்மை தடுத்தால், என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான் என்று சொல்லும் வழக்கமும் ஏற்பட்டது 😊.
அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்த போது 🌊 வாசுகி பாம்பு 🐍 வெளியிட்ட விஷத்தை உண்ட சிவபெருமான் 🕉️, நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி 💃 விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத் தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம் 🙏.
நந்தி தேவர் 🐂, ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன் 🥁, சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி ⚔️, தனப்ரியன் 💰, கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
பிரதோஷ பூஜையில் நந்திக்குத் தான் முதல் அபிஷேகம் நடைபெறும் 🥥. இத்தினத்தில் நந்தி பகவானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும் 👀🙏.
கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் 🚫, வீழ்ந்து வணங்குவதும் கூடாது.
பிரதோஷ பூஜையில் நந்தி பகவானை வழிபட்டால் சகல தெய்வங்களையும் வழிபட்டதற்கு ஒப்பாகும் 🌺🙏.
✨ நந்தி பகவானை பிரதோஷ நாளில் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
🔸 நந்தி பகவானை மூன்று முறை பிரதட்சணம் செய்தால் எண்ணிய காரியம் நிறைவேறும் 🙏
🔸 நந்தி பகவானை ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் ஜெயம் உண்டாகும் 🏆
🔸 நந்தி பகவானை ஏழு முறை பிரதட்சணம் செய்தால் துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் உண்டாகும் 🌿
🔸 நந்தி பகவானை ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் 👶
🔸 நந்தி பகவானை 11 முறை பிரதட்சணம் செய்தால் ஆயுள் விருத்தி உண்டாகும் 🕊️
🔸 நந்தி பகவானை 13 முறை பிரதட்சணம் செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும் ✨
🔸 நந்தி பகவானை பதினைந்து முறை பிரதட்சணம் செய்தால் செல்வம் பெருகும் 💰
🔸 நந்தி பகவானை பதினேழு முறை பிரதட்சணம் செய்தால் தன விருத்தி உண்டாகும் 📈
🔸 நந்தி பகவானை 108 முறை பிரதட்சணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் 🔱
🔸 நந்தி பகவானை 1008 முறை பிரதட்சணம் செய்தால் ஒரு வருட தீட்சை பெற்ற பலன் கிடைக்கும் 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🌙சந்திர தரிசனம்🔯