B. CELLIN
713 views
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் காலை ஜெபம்* "உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை. எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்". (திருப்பாடல் 81: 9-14) ஒன்றுமில்லாது இருந்த என்னை, என் தாயின் கருவில் இருந்தபோது, பெயர் சொல்லி அழைத்த என் அன்பு தெய்வமே! அகிலத்தையும் படைத்த உம் அருட் திருக்கரங்களில், தூசிக்கும் சமமான இந்த அடியேனின் பெயரைப் பொறித்தவரே! பாவ சகதியில் கிடந்து பரிதவித்த இந்த பாவியை, உம் கருணைக் கண்களால் கண்ணுற்று கை தூக்கி விட்டவரே! உம்மை இந்த அதிகாலை வேளையில் போற்றுகிறேன். புகழ்கிறேன். ஆராதிக்கிறேன். உமக்கு நன்றி செலுத்துகிறேன். தந்தையே! என்னுடைய சிறுபிராயத்திலிருந்து பலமுறை, பலரின் மூலம் என்னோடு பேசி இருக்கிறீர். என்னை உம் பாதையில், உம் அருகில் அழைத்திருக்கின்றீர். உம் குரலைக் கேட்காத, உம் அழைப்பை உணராத, செவிடனாக இருந்த நேரங்களுக்காக மனம் வருந்துகிறேன். உமது நற்செய்தியை அறிவிப்பது என் கடமை என தெரிந்திருந்தும், வாய் பேசாத ஊமையாக இருந்த தருணங்களுக்காகவும், மனம்வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இயேசுவே! என் நாவினைத் தொட்டு 'எப்பத்தா' என கட்டளையிட்டருளும். என் காதுகள் திறக்கப்படட்டும். என் நாவும் கட்டவிழப்படட்டும். இறைவார்த்தைகளும், ஆறுதல் அளிக்கும் அன்பு நிறைந்த வார்த்தைகளும் அவை உதிர்ப்பனவாக. திறக்கப்பட்ட செவிகள் உமது அழைப்பை, உமது வார்த்தைகளை கேட்டுணரட்டும். உமது அழைப்பை உணர்ந்து, உமது திருவுளத்தை அறிந்து, உமது பாதையில் நான் பயணிக்க, ஆண்டவரே தயைகூர்ந்து அ.ருள்புரிவீராக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*