தமிழ்சீயான்43
3.3K views
1 months ago
*✝️ காலை ஜெபம்* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #பைபிள் #கிறிஸ்தவ பைபிள் வசனம் #பைபிள் வசனம் "பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, ‘இதோ வருகின்றேன்.’ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை". (திருப்பாடல் 40: 6-10) என் இனிய இயேசுவே! உம் திருமுன் பணிந்து, உம்மை ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி கூறுகின்றேன். இறைவா! இதோ உம் திருவுளம் நிறைவேற்ற, நான் வருகின்றேன். இறைவா! உமது இறைத்திட்டத்தை நிறைவேற்றும் இறைக்கருவியாக என்னை மாற்றியருளும். என் வாழ்க்கையில், இறைத் திருவுளத்தை நான் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதலிலும், தாழ்ச்சியிலும், பொறுமையிலும், அன்பிலும், அன்னை மரியாளை நான் பின்பற்ற, இறைவா எனக்கு அருள் புரிவீராக. இந்த புதிய நாளை எனக்கு அளித்ததற்காக, உமக்கு நன்றி கூறுகின்றேன். இறைவா! உமது உதவி இல்லாமல், என்னால் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடன் இருந்து என் தேவைகளில், எனக்கு உதவி செய்ய உம்மை வேண்டுகிறேன். ஏனெனில், என்றென்றும் எங்களோடு இருக்கும், 'இம்மானுவேல்' என்னும் ஆண்டவராகிய இறைவன் நீர் ஒருவரே. இயேசு, மரி!, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன் *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*