Savittri Raju
641 views
"அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" வள்ளலார் இராமலிங்க அடிகள் தை பூசம் அன்று ஜோதியில் இரண்டர கலந்தார். . இந்த தினத்தில் அவர் இயற்றிய திருவருப்பாவை சொல்ல நன்மை உண்டாகும் . வடலூர் இராமலிங்க ஸ்வாமிகளை 9வது வயதில் தான் அவரது சகோதரர் சபாபதி அவரை பள்ளிக்கு அனுப்பினார். வகுப்பில் மாணவர்கள் தினசரி ஸ்துதியான ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தனர் ஆனால் இராமலிங்கர் மட்டும் எதுவும் சொல்லாமல் கண் மூடி அமர்ந்திருந்தார். இதை கண்ட ஆசிரியர் நீ மட்டும் ஏன் சொல்லவில்லை என வினவ அதற்கு இராமலிங்கர் ஆசிரியரே இந்த ஸ்துதியில் யாரை வணங்கி சொல்ல வேண்டும் என்று கேட்க அதற்கு ஆசிரியர் முருக பெருமானை நினைத்து என்று கூறினார். குருவே இந்த ஸ்துதியில் எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று இருக்கே என சொன்னார் ஆசிரியரும் சரி நீ வேண்டும் வேண்டும் என ஒரு பாடலை பாடேன் என்றார். 9 வயதான இராமலிங்கம் கொஞ்சம் கூட தாமதிக்காமல் மடை திறந்த வெல்லம் போல ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்..... உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்..... பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்.. பொய்மை பேசாதிருக்க வேண்டும் .. பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....... மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் ... உனை மறவாதிருக்க வேண்டும்.... மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்..... நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..... தரும மிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே... தண்முக துய்யமணி யுன் முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே..... இந்த பாடலை கேட்ட ஆசிரியர் தமக்கு அவருக்கு உபதேசம் செய்யும் அருகதை இல்லை என நினைத்து அவரை வாழ்த்தினார். இந்த தை பூச திருநாளில் திருவருட்பா பாடி முருகனின் அருளுக்கும் இராமலிங்க ஸ்வாமிகளின் அன்புக்கும் பாத்திரமாவோம் #தைபூசம் ..... Savittri Raju🙏