Om nama shivaya🌿🔥
406 views
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 சிவபெருமான் உமாதேவியாருக்குச் சதுர்யுகதர்மங்களும் கூறிய பின்னர், இனிக்கலியுகத்திலே அறுபத்து மூன்று தொண்டர்கள் பிறந்து தம்பால் மெய்யான பக்தி செய்வார்கள் எனவும், அவர்கள் சரிதத்தை உபமன்னியு பகவான் பக்தர் கூட்டத்துக்குச் சொல்லுவர் எனவும் கூறி, அச்சரிதத்தை முன்னுரைத்தருளினார் என்று பரம இதிகாசமாகிய சிவரகசியத்தில் நவாம்சத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அவர் திருவாய் மலர்ந்தருளிய பிரகாரமே, அறுபத்து மூன்று நாயன்மார்களும் திருவவதாரத்தை உபமன்யு மகாமுனிவர் அவர்கள் சரிதத்தை இருடிகளுக்கு அருளிச்செய்தார். அதற்கு உபமன்யு பக்தவிலாசம் என்று பெயர். உபமன்யு மகாமுனிவர் சிவபெருமானால் வருவித்தருளபட்ட திருப்பாற்கடலை உண்டவரும், கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷை செய்வித்து சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தவருமாயுள்ளவர் என்று, சைவபுராணம், கூர்மபுராணம், மகாபாரதம் முதலிய நூல்களாலே நிச்சயிக்கப்பட்டவர். உபமன்னியு பக்த விலாசமானது சிவரகசியத்திலே சொல்லப்பட்ட அறுபத்து மூவர் சரித்திரத்திற்கு ஒத்திருக்கின்றது. இன்னும் அகத்திய மகாமுனிவரும் இவ்வறுபத்து மூவர் சரித்திரத்தை தம் மாணாக்கர்களுக்கு அருளிச் செய்தனர். அதற்கு அகத்திய பக்த விலாசம் என்று பெயர். ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயகரவர்களால் இயற்றப்பட்ட 'சித்தாந்தரத்நாகரம் - சித்தாந்தசேகரம்' (1907 - second edition)என்னும் நூலில் இருந்து... #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐