காலை ஜெபம்*
"உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும். கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்".
(திருப்பாடல் 37: 5-6. 30-31. 39-40)
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றவரே!
விண்ணகத்தின் வாயில்களைத்
திறக்கின்றவரே!
வையகத்தின் வளங்களைத்
தருகின்றவரே!
உம்மை வாழ்த்தி, போற்றி, துதித்து ஆராதனை செய்கிறோம்.
தந்தையே! நான் புறத்தூய்மைக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்துவிட்டு, அகத்தூய்மையைப் பற்றி அதிகம் எண்ணாமல், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக இருந்த கடந்துபோன காலங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். என் உள்ளத்திலிருந்து வந்த பாவத்திற்குக் காரணமான, தீய எண்ணங்களே என்னைத் தீட்டுப்படுத்தின. உள்ளே சென்ற உண்ணும் பொருள்களோ, மற்றவையோ தீட்டுப்படுத்தவில்லை. அவை தூயனவையே. ஏனெனில், நீர் படைத்தவை அனைத்தையும் நல்லதெனக் கண்டவர்.
இறைவா! என் உடலைத் தூய ஆவியானவர் குடிகொள்ளும் ஆலயமாக மாற்றியருளும். ஏனெனில், ஆண்டவரே! "மாசற்று நடப்பவரே உமது கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்" என்பதை நான் அறிவேன்.
பாவங்களற்ற தூய உள்ளத்தோடும், தீய எண்ணங்களற்ற அகத்தூய்மையோடும், நான் இந்த நாளைத் துவக்குகின்றேன். உம் பிள்ளையாகிய என்னை அன்போடு அரவணைத்து, ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்