ஈஸ்வரபட்டர்
551 views
#🙏நமது கலாச்சாரம் ஸ்ரீ கிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர்… பாரதத்தில் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு மனைவியுடன் இமயமலைக் காட்டிலே வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யுதிஷ்டிரரிடம்… அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கு ஏன் துன்பம் வர வேண்டும்…? என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர்… தேவி…! இதோ இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சி அளிக்கின்றது…! நான் இதனை நேசிக்கின்றேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தை பறி கொடுப்பது என் இயல்பு. அதனால்தான் அதனை விரும்புகின்றேன். 1.அது போலவே இறைவனை நான் நேசிக்கின்றேன். 2.அவரே எல்லா அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூல காரணம். 3.அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. 4.அவரை நேசிப்பது என் இயல்பு… ஆதலால் நான் அவரை நேசிக்கின்றேன். அதற்காக வேண்டி அவரிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் “என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும்…” 1.”அன்பிற்காகவே…” அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். 2.அன்பை விலை பேச என்னால் முடியாது என்றார். அதாவது… இவ்வுலக நன்மை அல்லது மறு உலக நன்மை கருதி இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்பிற்காகவே அவரிடம் அன்பு செலுத்துவதே மிகவும் சிறந்தது.