திரைபாரதி
1.9K views
காங்கிரசின் பரிதாபகரமான நிலை... இதற்கு யார் காரணம் என்றால் யாரும் இல்லை. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது, அம்புட்டுத்தேன்! கிட்டத்தட்ட தவெகவின் நிலையும் அதுதான். அரசியலில் தவெகவின் வரவு யாரை பாதித்திருக்கிறதோ இல்லையோ காங்கிரசை வெகுவாக பாதிக்கிறது என்பதே உண்மை. கட்சியின் எதிர்காலத்தை முன்னிட்டும் சுதந்திரமான செயல்பாட்டை முன்னிட்டும் காங்கிரஸ் தவெகவுடன் சேர்வது நல்லது என்பது இளைஞர்களின் கருத்து. ஆனால், ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகை போன்ற தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். BJP சிறப்பான கூட்டணியை அமைப்பதற்கு எவ்வளவுதான் போராடினாலும், எடப்பாடி அதன் வியூகங்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கி வருகிறார். அதற்கு ஒன்றல்ல, பல உதாரணங்கள் உண்டு. * கட்சியில் ஓபிஸ் இணைவதற்கு எதிர்ப்பு. * கட்சியில் சசிகலா இணைவதற்கு எதிர்ப்பு * செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது. (அதாவது, விசுவாசத்திற்கு கட்சியில் EPS ஐ விட்டால் வேறு ஆளே இல்லை! * தேமுதிகவை அணைத்துக் கொண்டு செல்லத் தவறியது. (அதை திமுக பக்கம் திருப்பியதே இவரது ராஜதந்திரம்.) காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கிறது என வைத்துக் கொள்வோம். அத்துடன் சசிகலாவும் எடப்பாடியை பழிவாங்கும் நோக்குடன் தனிக்கட்சி ஆரம்பித்தால், NDA கூட்டணிக்கு மிகவும் சிக்கலாகிவிடும். மேலும், ஒருவேளை அப்படி நேர்ந்தால், தவெகவின் ஆட்டம் இந்த தேர்தலுடன் குளோஸ்! NDA கூட்டணியில் தவெக ஐக்கியமானால், நிச்சயம் நிலைமை தலைகீழாக மாறும், திமுக தோல்வி அடையும் என்பது களநிலவரங்களில் உறுதியாகத் தெரிகிறது. விஜய் மற்றும் EPS க்கு "இது வாழ்வா சாவா?" என்ற தேர்தலாக இருப்பதால் கடைசி நேரத்தில் BJPயின் முயற்சியில் கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்தப் பின்புத்தில் காங்கிரசின் நிலை பரிதாபமாகிறது. அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைக்கிற பட்சத்தில், தேர்தலில் அதன் வெற்றி வாய்ப்பு பறிபோகிறது. மேலும், அடுத்த பாராளுமன்னத் தேர்தலிலும் இது எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரே மாற்றுவழி, காங்கிரஸ் தவெகவுடன் கூட்டு வைத்துக் கொள்வதே. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் போது தொங்கு சட்டசபை அமைவது சாத்தியமாகலாம். தேர்தலுக்குப் பின் கூட்டணி நிலவரங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்போது, ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் ஆசை நிறைவேறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பின்குறிப்பு: விஜய் காங்கிரசை நம்பி காரியத்தில் இறங்குவதை விட NDAவுடன் கூட்டு வைத்தால் துணை முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்! "கரணம் தப்பினால் மரணம்" என்பது அரசியலுக்கும் பொருந்தும்! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴