ஒரே மாதிரி செய்கிறோம்... கிளர்ச்சியுடன் தான் செய்கிறோம். ஆனால் ஒருநாள் கிடைக்கும் கிளர்ச்சியவிட மறுநாள் கிடைக்கும் சுய இன்பக் கிளர்ச்சி அதிகமாகவோ, குறைவாகவோதான் கிடைக்கிறது. அது ஏன் ? என்பதுதான் அந்த கேள்வி.
இத்தனைக்கும் ஆணின் உச்ச இன்பம் என்பது தெளிவானது. குழப்பம் இல்லாதது.
ஆணுக்கு உச்ச இன்பத்தைக் கொடுக்கும் Penis வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது.
செக்ஸில் அவனால் எளிதில் உச்ச இன்பம் அடைய முடிகிறது. ஒரு ஆண், டாக்டரிடம் உச்ச இன்பம் அடைய முடியவில்லை என்று செல்வதில்லை.
ஆனால் பெண்ணுக்கு அந்தப் பிரச்சனை இருக்கிறது.
பெண்ணுக்கு உச்ச இன்பம் கொடுக்கும் Clitoris ஏன் அவ்வளவு எளிதாக பார்ப்பதற்கு தெரிவதில்லை.
அது ஏன் பெண்ணுறுப்பின் உள்மடிப்புகளில் ஒளிந்திருக்கிறது. அதை ஏன் தேட வேண்டியதிருக்கிறது.
ஏன் இயற்கை அப்படி செய்ய வேண்டும்?
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு Joe Quirk என்னும் அறிவியல் எழுத்தாளர் கேட்டு இதற்கு ஒரு பதிலையும் சொல்கிறார்.
எளிதில் தெரியாத மறைந்திருக்கும் கிளிட்டோரியஸின் வேலையே ஆண் எந்த அளவுக்கு நல்லவிதமாக நடந்து கொள்கிறான், நல்லபடியாக கிளர்த்துகிறான் என்று சோதனை செய்யத்தான்.
நன்றாக உணர்வுப்பூர்வமாக கலந்தவன், ரசித்து செய்பவன், நல்ல Foreplay செய்பவன் கிளிட்டோரியஸை அடையாளம் கண்டுகொள்கிறான்.
ஒருவேளை அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவன் சரியான காதலனாக நடக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
பெண் தாராளமாக கிளிட்டோரியஸைக் கண்டுபிடிக்கும் அடுத்தக் காதலனை நோக்கி நகரலாம் என்று குயிர்க் சொல்கிறார்.
பெண்ணுறுப்பின் இந்த கிளிட்டோரியஸ் மர்மம், ஒரு உறவின் போது எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய, இன்னொரு உறவில் சரிவர கண்டுபிடிக்க முடியாத மர்மமே ஆணை பெண்ணிடம் தொடர்ச்சியாக இருக்கச் செய்கிறது என்று குயிர்க் சொல்கிறார்.
கிளிட்டோரியஸ் மர்மமே ஆண்களை பெண்களிடம் குழந்தைக்குப் பின் கூட இருக்கச் செய்கிறது.
அவனுடைய வாழ்க்கையின் இறுதிவரை பெண்ணின் அந்த உச்ச இன்பம் எப்போது எப்படி அடைகிறாள் என்பது அவனுக்கு பிடிபடாமலேயே இருக்கிறது. அதன் முக்கிய காரணியான கிளிட்டோரியஸின் தோற்றமும், ஒளிதலும் அவனுக்கு வியப்பாகவே இருக்கிறது.
அதுதான் அவனை செக்ஸை நோக்கி இருந்த்தி வைத்திருக்கிறது.
குழந்தைகளை அதன் அப்பா நன்றாக கவனித்தால் குழந்தையைப் பெற்ற அம்மாவுக்கு மகிழ்ச்சி.
அவள் மனம் மகிழ்ந்திருந்தால், அவளால் மகிழ்ச்சியான உடலுறவில் ஈடுபட முடியும், நல்ல கிளர்ச்சியோடு உறவில் ஈடுபட முடியும்.
அப்போது அவளது கிளிட்டோரியஸும் மர்மமில்லாமல் வெளிப்படும்.
அப்படி வெளிப்பட்டு அவள் உச்ச இன்பம் அடையும் போது ஆணுக்கு பெரிய மனதிருப்தியாக ஆகிறது.
தன்னால் முழுமையாக திருப்தியடைந்த பெண் ஆணுக்கு அதிகக் கிளர்ச்சியக் கொடுக்கிறாள்.
ஆக இந்த காரணத்திற்காகவே ஆண் தன் விந்துவை விட்டு குழந்தை உருவான பிறகும் கூட குழந்தையை கவனிக்க, பாதுகாக்க விரும்புகிறான் என்கிறார் குயிர்க்.
ஆக ஒரு பெண்,
குழந்தை பெற்று உயிர் உற்பத்தி செய்வதற்காக காமத்தின் மூலம் விந்துவையும்,
குழந்தையை வளர்க்க உதவுவதற்காக ஆணிடம் காமச்சிந்தனையை ஏற்றி இழுத்துக் கொள்கிறாள் ( இதை தந்திரமாக அவர் சொல்லவில்லை. இயற்கையாக அப்படி நடக்கிறது என்பதாக) .
எப்படி காமச்சிந்தனையை ஏற்றுகிறாள்?
தன்” மறை கிளிட்டோரியஸ் மர்மம்” மூலமாக குறுகுறுப்பை ஏற்றுவதன் மூலம் செய்துகொள்கிறாள்.
ஆணைப் பொறுத்தவரை யூகிக்க முடிந்தப் பெண்ணிடம் எளிதில் சலிப்படைந்து விடுகிறான்.
யூகிக்க முடியாத பெண்ணிடம்தான் அதிகம் காம எழுச்சியும் காதலும் கொள்கிறான்.
இதனாலேயே ஒரு பெண்ணின் கிளிட்டோரியஸ் காலமெல்லாம் அவனுக்கு கையாள்வதற்கு ஒரு இனிய சவாலாகவே இருப்பது அவனை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயமாக இருக்கிறது..
மறை கிளிட்டோரியஸ் மூலம் இயற்கை, பிறக்கும் குழந்தைகளுக்கான அம்மாவையும் அப்பாவையும் ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறது.
நான் படித்து புரிந்து கொண்ட அளவில் எழுதியிருக்கிறேன்.
ஒரு அறிவியல் கருத்தாக இது இருக்கலாம் என்றே எழுதுகிறார்.
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #💝இதயத்தின் துடிப்பு நீ