பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
574 views
23 hours ago
ஸ்ரீ (969)பள்ளிக்குழந்தைகளின் பசியை போக்க மேற்கு ஆப்ரிக்க நாடான சியாரா லியோனுக்கு 10 லட்சம் கிலோ அரிசியை அனுப்பி வைத்த பிரதமர் மோடி; இதுக்கு தான் அவரை உலகத்தலைவர்னு சொல்றாங்க..! சியரா லியோனின் பள்ளி மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா 10 லட்சம் கிலோ அரிசியை அனுப்பியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் செவ்வாயன்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா சியரா லியோனுக்கு 10 லட்சம் கிலோ அரிசியை அனுப்பியுள்ளது. இந்த உதவியானது, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பள்ளிக்குழந்தைகளின் பசியைக் குறைப்பதிலும், குழந்தைகள் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த நடவடிக்கை, உலகளவில் இந்தியாவின் மனிதாபிமானப் பணிகளைப் பிரதிபலிக்கிறது. பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்தியா 2025 அக்டோபரில் சியரா லியோனுக்கு 15 ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி நமது இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும் மனிதாபிமான வகையில் உதவிகள் செய்து வருகிறார். இதனால் தான் மற்ற நாடுகள் பிரதமர் மோடியை உலகத் தலைவர் என புகழாரம் சூட்டுகின்றன. இது சரிதானே? இது பற்றிய உங்க கருத்து என்ன? #பிரதமர் மோடி