AMANLATCHOUMY
581 views
ஒற்றை மார்புடன் அரிய கோலம் காட்டும் உஜ்ஜயினி காளியம்மன் வெற்றிக்கு விக்ரமாதித்தன் வழிபட்ட மாகாளி தலம் பொதுவாக அம்மன் கோயிலுக்கு சென்றால் அன்னை ஆக்ரோசமாகவோ அல்லது சாந்தமாகவோ நான்கு கரங்களுடன் காட்சியளிப்பதை பார்த்திருப்போம் ஆனால் திருச்சி சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி என்ற திருத்தலத்தில் நாம் இதுவரை கண்டிராத ஒரு அபூர்வ கோலத்தில் அன்னை உஜ்ஜயினி காளியம்மன் அருள் பாலிக்கிறாள் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த விக்கிரமாதித்தன் மகாராஜாவின் குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி ஆகும் இவர் காட்டில் ஆறு மாதமும் நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம் ஒரு முறை காட்டில் ஆட்சி செய்வதற்காக காவேரி காலையில் உள்ள மாகாளிக்குடி காட்டுக்குள் தான் வழிபட்ட காளி சிலை உடன் வந்தார் அங்கேயே சிலையை வைத்து வழிபாடு செய்தார் நாடு திரும்ப முயன்ற போது சிலையினை எடுக்க முடியவில்லை அப்போது அன்னை அவர் முன் தோன்றி இந்த இடத்தில் எனது சக்தி தங்கம் எனக் கூறியதால் மன்னன் அம்பிகைக்கு கோயில் கட்டி வழிபாட்டை தொடங்கினான் சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடு இல்லாதவர்கள் என்பதை உணர்த்தவே அர்த்தநாரிஸ்வரர் வடிவம் அமைத்து சிவபெருமானை போலவே தனக்கும் பூஜைகள் நடக்க வேண்டும் என பார்வதி தேவி கேட்டது விளைவாக இந்த வடிவம் உருவானதாக கூறப்படுகிறது இதனை மெய்ப்பிற்கும் வகையில் மாகாளிக்குடியில் ஒற்றைமார்புடன் அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் அன்னை எழுந்தருளியுள்ளார் இந்த அரிய கோலத்தை காண்பதே பெரும் பாக்கியம் இந்த கோயிலின் மற்றும் ஒரு சிறப்பு அம்மனின் திருக்கரங்கள் வழக்கமான எண்ணிக்கையில் இல்லாமல் இங்கு அன்னை மூன்று கரங்களுடன் காட்சி தருகிறாள் அசுரனை வதம் செய்த பின் அன்னை சாந்தமுகத்துடன் புன்னகை பூத்தவளாய் காட்சியளிப்பதால் இவளுக்கு ஆனந்த சௌபாக்கிய சுந்தரி என்ற திருநாமம் உண்டு திருமணத்தடை மிகவும் மாங்கல்ய பலம் அளிக்கவும் கடைகள் நீங்கவும் எழுதி தொல்லைகள் அகலவும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அம்மன் அருளால் நிறைவேறுகிறது சிவன் சக்தி இணைந்த மருத்துவமாக இருப்பதால் குடும்பத்தின் ஒற்றுமைக்கு இத்தலம் சிறப்புடையதாகும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்துக்கு மிக அருகிலேயே மா காளிக்குடி அமைந்துள்ளது தமிழகத்தில் இந்த அன்னையை உச்சிமா காளி என்று அழைக்கின்றனர் மன்னன் விக்ரமாதித்தன் போற்றி வழிபட்ட அன்னை வியக்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் மா காளிக்குடியில் அருள் பாலிக்கிறார் மனதிற்கு நிம்மதியையும் வாழ்விற்கு வளத்தையும் தரும் கோயிலுக்கு சென்று அன்னையை தரிசிப்பதால் பொறாமை தடைகள் போன்றவை அன்னையின் அருளால் விலகி நன்மை உண்டாகும் உஜ்ஜயினி மாகாளியை வழிபடுவோம் தோல்வி இல்லா வெற்றியை அடைவோம் #🙏ஆன்மீகம்