حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ لَهُ أَبُو مُوسَى أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ، مَاءً كَيْفَ يَصْنَعُ فَقَالَ عَبْدُ اللَّهِ لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ الْمَاءَ. فَقَالَ أَبُو مُوسَى فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم كَانَ يَكْفِيكَ قَالَ أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ. فَقَالَ أَبُو مُوسَى فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ، كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ فَقَالَ إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ الْمَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ. فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا قَالَ نَعَمْ.
ஷகீக் பின் ஸலமா அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அப்துல்லாஹ் மற்றும் அபூ மூஸா ஆகியோருடன் இருந்தேன். அப்போது அபூ மூஸா அவர்கள் அப்துல்லாஹ்விடம், "அபூ அப்துர் ரஹ்மானே! ஒருவருக்கு ஜுனுப் ஏற்பட்டு, தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் அவர் என்ன செய்வார் என்பது பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ், "தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழக் கூடாது" என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அபூ மூஸா, "அப்படியென்றால், நபி (ஸல்) அவர்கள் அம்மார் அவர்களிடம் 'உனக்கு இதுவே போதுமானது' என்று கூறிய கூற்றை என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ், "(அம்மாரின் அக்கூற்றைக் கேட்டு) உமர் அவர்கள் திருப்தியடையவில்லை என்பதை நீர் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அபூ மூஸா, "அம்மார் அவர்களின் கூற்றை விட்டுவிடுவோம்; இந்த (த் தயம்மம் தொடர்பான) இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் (அதற்கு) என்ன சொல்வதென்று தெரியாமல், "இதற்கு நாம் அவர்களுக்குச் சலுகை அளித்தால், வெகு விரைவில் அவர்களில் ஒருவருக்குத் தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தால் அவர் தண்ணீரை விட்டுவிட்டுத் தயம்மம் செய்ய முற்படுவார்" என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் அஃமஷ் கூறுகிறார்:) நான் ஷகீக் அவர்களிடம், "இதற்காகத் தானா அப்துல்லாஹ் அவர்கள் இதை வெறுத்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 346
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋