இந்த பிரபஞ்சத்திற்கே
நீ இராணி நான் ராஜா என்றேன்
நீ சிரித்தாய் என்றைக்குமே நீ என் மகாராணி தான் என்றேன்....
கவிதையே வேண்டுமானால் பொய் அழகாக்கலாம்
என் வாழ்க்கைய உன்னைத் தவிர யாரும் அழகாக்க முடியாது.
உன் தோழியிடம் நீ பேசிய வார்த்தையை மறைந்திருந்து கேட்டேன் என்று எனக்கு நானே ஆறுதல் கூறுகிறேன்.
வருடம் தோறும் வரும் காதலர் தினம் உன் நினைவுகள் என் மனதில் இருப்பதனால் நாள்தோறும் எனக்கு காதலர் தினமே.
உன் சந்தோஷம் என் சந்தோஷம் என்று சொன்னாய்
உன் ஆசைய நிறைவேற்ற என் ஆசையை துறந்தேன்.
காளியம்மன் கோவில் திருவிழாவில் இருவரும் ஒரே கலரில் ஆடைகள் அணிந்தோம் ஊரே நம்மை கண்டு வியந்தது.
ஊரே பேசியது நீ
எனக்கானவள் என்று
நான் அறியவே இல்லை இப்படி என்னை நடுவீதியில் விட்டு செல்வாய் என்று.
உன் தாய் தந்தை ஆசைக்காக நீ என்னையே இழந்தாய் நீ இழந்தது என்னை மட்டுமல்ல நம் இருவரும் சேர்ந்து காதலித்த காதலையும் .
காதலர் தினத்திற்கு கவிதை எழுதுவதற்கு நினைவுகள் வருதோ இல்லையோ.
உன் நினைவுகள் வரும்போது எல்லாம் பல கவிதைகளை எழுதி விடுகிறேன்.
காதலர் தினத்தை எதிர்பார்த்த
நாட்களை விட
என் காதலியே நீ வரும் நாட்களை எதிர்பார்த்ததே அதிகம்.
காலங்கள் தான் ஓடியது நாம் அன்று பேசிய வார்த்தைகள்
என் இதயங்களில் அழியாத பொக்கிஷமாய் ஆனது.
ஓர் இரவை தொலைக்க ஒரு பாடல் போதும் என் மனதில் இருக்கும் உன்னை மறக்க இந்த ஒரு ஜென்மம் போதாது.
செல்வா ✍️
#💞Feel My Love💖 #💔காதலர் தினத்தில் காதல் தோல்வி😢 #👗GRWM for காதலர் வாரம்💕 #💕காதலர் தினம் பரிசுகள்🎁 #😂காதலர் தின மீம்ஸ்💕