#இதயம் பேசுகிறது மகிழ்
வாழ்தலை முன்நிறுத்தும் எழுத்து !
என்னவான போதிலும்
இங்கின்றி எங்கு
தொலைந்த போதிலும்
வாழ்தலை தான் போதிக்கிறது
இயற்கை
ஒட்டியபடியே
புது இலைகளை துளிர்க்கின்றன
ஒடிந்த மரக்கிளைகள்
மௌனக்கூடுகளில் வாழ்ந்தாலும்
வண்ணங்களை சேமிக்கின்றன
பட்டாம்பூச்சிகள்
கண்ணுக்குத் தெரியாமல்
வாழ்ந்தாலும் கோட்டை கட்டுகின்றன
எறும்புகள்
தரை பிரிந்து வழி மறந்தாலும்
புது நிலத்தில் சிறகடிக்கின்றன
பறவைகள்
வடிவிழந்த நதியிலும் ஈரமுள்ளது
கடல் சேராத போதும் கட்டாயம் ஒரு மழை வருகிறது
தனித்த போதும்
மௌனம் நம்மீது திணிக்கப்பட்ட போதும்
நம் அடையாளங்கள் நம்மை காயப்படுத்தியபோதும்
நாமென்ற நிகழ்வு முடிந்துவிடுவதில்லை
ஒரு பாடலுடன் இசை தீர்ந்துவிடுவதில்லை
இன்றிலிருந்து மற்றுமொரு இன்று
அவ்வளவு தூரமொன்றுமில்லை
இயைந்துவிட்டால் இயற்கை
நம்மை நகர்த்திக்கொள்ளும்.
"துரோகம்"
கண்டவுடன்
இடத்தை விட்டு விலகு
"துவேஷம்" வளராது .....
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இல்லாமல் போகும் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும்
உங்களைப் பற்றி நீங்களே தாழ்வாக நினைக்கும்போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களைப் பற்றி எவரேனும் ஒருவர் உயர்வாக எண்ணிக்கொண்டு இருப்பார்.
உலகில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்கள் என்றோ அனைவராலும் வெறுக்கப்பட்டவர்கள் என்றோ எவருமே இல்லை.
மலர் இல்லாச் செடிகூட மகிழ்ச்சி தரும்.
🚩 பகவத்கீதை🚩
உண்மைகள் வாய் மூடி
அழும்போது தான்
பொய்கள் பற்கள் தெரிய
சிரித்து விட்டு செல்லும்...
உண்மையான அன்புக்கு
போலியான உறவும்... !!!
போலியான உறவிற்கு
உண்மையான உறவும்.. !!!
கிடைப்பதால் தான் "
அன்பு இன்றும் "யாரோ"
ஒருவரிடம் தோற்றுக்
கொண்டே இருக்கின்றது..
பற்பல பிறப்பு, இறப்புளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை (இறைவனை) அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.
- 🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.🚩
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
13.#க்ஷேத்ர_க்ஷேத்ரக்ஞ_விபாக_யோகம். பாகம்_12
🙏 15. " பொருள்களுக்குப் புறமும், உள்ளும் உள்ளது; அது அசையாதது, அசைவது; நுண்மையானது என்பதால் அறிவதற்கு அரிதானது; எட்டவும், கிட்டவும் இருப்பது அது". 🙏
விளக்கம் : முந்தைய ஸ்லோகங்களின் தொடர்ச்சியாகவே, இதிலும் பரப்பிரம்மத்தைப் பற்றியே அர்ஜுனனுக்கு விளக்குகிறார்! ஶ்ரீகிருஷ்ணர்.
கடலில் மிதக்கும் பனிக்கட்டியின் உள்ளும், புறமும் இருப்பதும் நீரே. அவ்வாறே பரமாத்மா எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
கடலின் மேல்புறம் அலைவீசி அசைந்தாலும், கீழ்புறம் அசையாதிருக்கிறது. அதைப்போல பரமாத்மாவும் குணங்களோடு பொருந்தி பிரகிருதியாக இயங்குகிறார். பனிக்கட்டி கரைந்தப் பின்னர், நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவ்வாறே சுத்த நிர்க்குண பிரம்மம் , பேரறிவு வடிவம் என்றாலும் மனப்பக்குவம் இல்லாத மானிடருக்கு அது தெரிவதில்லை.
தன் சொந்தப் பூமியில் தன் பாதத்திற்குக் கீழே பொன் இருப்பதை மானிடன் அறிய மாட்டான். அதைப்போல தனக்குள் பரமாத்மா இருப்பதை சாதாரண மனிதன் உணரமாட்டான்.
தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவன், விண்ணுலகில் அவர் இருக்கிறார்! என்றும், மறுமையிலேயே அவரைப் பார்க்க முடியும்! என்றும் நினைக்கிறான். தனது #அந்தராத்மாவே_பரம்பொருள்! (#உள்ளுணர்வு) என அறிவுடையோர் உணர்வர்.
நமக்கு கிடைக்காத ஒன்றில் தான் நம் மொத்த சந்தோசமும் உள்ளது என்று நினைப்பது தான் மனித குணம்!
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன் திரும்ப வரும்போது தெரியும் நீ செய்த என்ன என்று தெரியும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
*********************
இறைவனிடம் தாளாதப் பக்தியுடன் இருப்போர், அனைத்தையும் விட, தனது ஆழ்மன உள்ளுணர்விற்கே முக்கியத்துவம் கொடுப்பர்! ஏனென்றால். அது இறைவனின் குரல்! என அறிவுடையோர் அறிவர்; இறைவன் தன்னை வழிநடத்துகிறார்! என உறுதியாக நம்புவர்.
எனவே #பரப்பிரம்மம் அனைத்து பொருள்களுக்கும் #உள்ளும், #புறமும் உள்ளது; அது அசையாதது! அசைவது! நுண்மையானது! தொலைவிலும், அதே நேரம் அருகிலேயும் உள்ளது!' என்று #அர்ஜுனனுக்குப்_போதிக்கிறார்! #ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏
#ஶ்ரீகிருஷ்ணா_சரணம் 🙏
.