S.ANTHONY✝️YESUMARY
3.9K views
7 days ago
✝️ ஜெபம்🌤️🌴* *🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹* *நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;* *ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்.* *அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.* *பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.* *நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.* (திருப்பாடல் 1 : 1-4,6) *✝️ஜெபிப்போமாக :🛐* *இஸ்ரயேலின் தூயவரே! எங்கள் ஆண்டவராகிய கடவுளே! எங்களுக்கு பயனுள்ளவற்றைக் கற்பிப்பவரே! செல்லவேண்டிய வழியில் எங்களை நடத்துபவரே! உம்மை இந்தக் காலை வேளையில் வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். ஆராதனை செய்கிறோம்.* *இறைவா! நாங்கள் பொல்லாரின் சொல்லின்படி நடவாமல்; பாவிகளின் தீயவழி நில்லாமல், இகழ்வாரின் குழுவினில் அமராமல் எங்களைக் காத்தருளும்.* *எங்கள் வாழ்வில் நாங்கள் அவ்வாறு இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். ஏனெனில் அவ்வாறு இருப்போர் உமது திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறவோ, அதைப்பற்றி இரவும் பகலும் சிந்திக்கவோ இயலாது.* *இறைவா! இன்றைய நாளை உமது திருக்கரங்களில் ஒப்படைக்கிறேன். என் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதித்து வழிநடத்தும்.* *ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம் என்றென்றும் போற்றப்பப்படுவதாக.* *ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்