#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
என்னை அப்படியே உள்வாங்கி
கொண்ட மெத்தையில்
தனிமையில் சொகுசாய் படுத்தேன்
தொடவில்லை என்னை உறக்கம்
தாயின் மடி தன்னில் இருந்ததை
நினைத்தேன் அப்போதெல்லாம்
விடவில்லை என்னை உறக்கம்
என தெரிந்தேன் அது போல்
சொர்க்கம் வேறு இல்லை என்றே இருந்தேன்
காலம் பரிசாய் தந்த தாரத்தின்
தலை கோதி தந்த மடி சுகத்தில்
உறக்கம் இல்லை ஆனால் அது
தந்த கிறக்கம் போல்
உலகில் எதுவும் இல்லை எனத்
தெளிந்தேன்