தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்கள் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, வடக்கு நாட்டாணிகோட்டை கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .உடன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்கள்,ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.அன்பழகன், திரு.முத்துமாணிக்கம், திரு.ரவிச்சந்திரன், திரு.அருள்நம்பி, திரு.ஞானபிரகாசம், பேரூர் செயலாளர்கள் திரு.சேகர், திரு.மாரிமுத்து, பேரூர் மன்ற தலைவர் திருமதி.சாந்தி மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.
#DMKThanjavur
##dmkthanjavur