நஜிராஅமான்
548 views
பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் பொதுவாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு விரதம் இருப்பார்கள் ஆனால் தன் பிள்ளைகளாகிய பக்தர்களின் அருகனுக்காக அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி சமயபுரம் மாரியம்மன் விரதம் இருக்கும் அதிசய நிகழ்வு மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சமயபுரத்தில் மிக விசேஷமானது அன்றுதான் உலகப் புகழ்பெற்ற பூச்சொளிகள் விழா தொடங்குகிறது பலடன் கணக்குல ஆன நறுமண மலர்கள் அம்மன் மீது சொரியப்பட்டு மாரியம்மன் மலர் கோலத்தில் காட்சி அளிப்பாள் இந்த நறுமணத் திருவிழாவோடு அம்மனின் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது உலகத்தை காக்கும் அன்னை மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 27 நாட்கள் விரதம் மேற்கொள்கிறாள் இந்த விரத காலத்தில் அன்னைக்கு அண்ணம் நிவேதனம் செய்யப்படுவதில்லை ஒருவேளை மட்டுமே அன்னைக்கு பானகங்கள் இளநீர் துள்ளு மாவு குளிர்ச்சி தரும் வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை மட்டுமே அன்னைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன அம்மா பட்டினியாக இருக்கும்போது பிள்ளைகள் மட்டும் உண்பார்களா ? அம்மன் விரதம் இருக்கும் அதே 27 நாட்களும் சமயபுரம் மக்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள். அம்மனின் திருமேனியில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கவே குளிர்ச்சியான பொருள்கள் படைக்கப்படுகின்றன இத்தலத்து அம்மன் சுயம்புவாக உருவானவர் இங்குள்ள மூலவர் திருமேனி மூலிகைகள் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும் சமயபுரத்தாளை வழிபடுவோம் நன்மைகளை அடைவோம் #ஆன்மீகம்