💖ரூபன் 💖
541 views
#😓காதல் துரோகம் #❤️காதல்💘 அன்று நான்தான் உனக்கு உயிராய் இருந்தேன் என் கைளை இறுகப்பிடித்திருந்தாய்.. நிலவொளியில் மெல்லிய குளிரில் உன் அணைப்பின் கதகதப்பில் அந்த தெருக்களில் நடந்துகொண்டிருந்தேன் அடிக்கடி என்பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தாய் உனக்குள் நான் எவ்வளவு ஆழமாய் வாழ்கிறேன் என்பதை நினைத்து பிரமித்தே போனேன் அந்த இருளில் வானத்திலிருந்த நிலாக்கூட பொறாமை கொண்டு முகிலுக்குள் ஒழிந்துகொண்டது நம்காதலின் ஆழம்கண்டு. இறுகப்பிடித்த உன்கைகளுக்குள் என்கைகள் விடுபடத்தோன்றாமல் மயங்கிக்கிடந்தது குழந்தைபோல கெஞ்சிய உன்வார்த்தைகளில் நான் தாயாகிப்போயிருந்தேன் உனக்கு பிறகு ஒரு நாள்.. பிறகு ஒருநாள் … காணாமலே போனாய் பிறகு ஒரு நாள் மறுபடி அதே மழலையாய் வந்து அமர்ந்தும் கொண்டாய் மறுபடியும் சண்டைபோட்டுக்கொண்டாய் போனாய் நீ வரும்போதெல்லாம் அணைத்துக்கொண்டு நீ விலகும்போதெல்லாம் துடித்துக்கொண்டு வெறுப்பு எதுவும் வராமல் நான் ஏன் உன்னை நேசித்தேன் என்று உனக்கு வியப்பிருக்கலாம் நீ தந்த அன்பை விடவும் அன்பை உனக்குக்கொடுத்தே அன்று நிறைந்துகிடந்தேன் நீ தந்த வலிகளை விடவும் உன் இருப்பின்கதகதப்பு என்னை உயிர்ப்பித்து ஒளிர்வித்து வைத்திருந்து பிறகு அணைத்தே போனது ரூபன் ❤️❤️❤️❤️😔😔😔