நேர ✝️ஜெபங்கள்🕯️*
🌝🌟✨🌝🌟✨🌝🌟✨🌝🌟✨
(குறிப்பு : இந்த 5 ஜெபங்களும் மிகவும் வல்லமையானவை தினமும் இரவு தூங்க செல்லும் முன் ஜெபிப்போம். இறைவனின் அருளாசீரையும், அன்னையின் அருட்காவலையும் பெறுவோம்.)
🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙
*🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻*
🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙
எல்லாம் வல்ல இறைவா!
இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன்.
ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக!
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக!
இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் நிரப்பியருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும்.
என் நல்ல காவல் தூதரே!
என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
*🙏🏻ஆமென்! †🙏🏻*
🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸
*† இரவு நன்றி ஜெபம் †*
🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸
🧎♂️🧎♀️ எங்கள் அன்பின் பரலோக பிதாவே!
உம்மை போற்றுகிறேன். ஆராதிக்கிறேன். நன்றி செலுத்துகிறேன். இன்று முழுவதும் என்னோடு இருந்து என்னைக் காத்து நடத்தியமைக்காக நன்றி!
எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றியருளும். உலகெங்கும் பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டு கிறோம். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந் துள்ளது. அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
கடவுளே!
என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். ஏனெனில் நீரே என் புகலிடம். என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்!
இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்!
வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!
இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!
நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே, *ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.* (வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர்.
நன்றி தந்தையே!
இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!
எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே,
*ஆமென்! †*
💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻
*🙏🏻இரவு மன்னிப்பு செபம்🙏🏻*
💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻
*🙏🏻உத்தமனஸ்தாப செபம்🙏🏻*
என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன்
*🙏🏻ஆமென்.🙏🏻*
🙏🏻✝️அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.
🙏🏻✝️எங்களை ஒரு குழுவாக குடும்பமாக நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம்.
🙏🏻✝️பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.
🙏🏻✝️தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும்.
🙏🏻✝️பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.
🙏🏻✝️எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும் மனம்புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும்
🙏🏻✝️தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும்.
🙏🏻✝️நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.
*🙏🏻ஆமென்🙏🏻*
🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙
*🙏🏻இரவு தூங்கும் முன் ஜெபம்🤲🏻*
🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙
என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே!
நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்!
உம்முடைய கிருபை இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி!
உம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி!
இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக!
உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்!
இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்!
காலையில் நான் விழிக்கின்றவரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்!
நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்!
உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி!
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்!
நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்!
நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு!
வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்!
*ஆமென்! †*
🌙🪐✨🌙✨🌙🪐✨🌙🪐✨
எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத்
திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும்.
மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
🌝✨🌟🌝✨🌟🌝✨🌟🌝
🙏🏻 *மரியாயே எங்கள் நல்ல தாயாரே...🤲🏻இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் சடுதி மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.*🙏🏻
இயேசுவுக்கே புகழ்..!
இயேசுவுக்கே நன்றி..!
மரியே வாழ்க..!
தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயராலே....
*ஆமேன்🙏🏻*
🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
*தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்*
🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே...
ஆமேன்.
இயேசு மரி சூசையே வாழ்க.!
✠ இதோ ஆண்டவருடைய சிலுவை.
✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள்.
✠ யூதா கோத்திரத்தின் சிங்கம்.
✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது.
அல்லேலூயா.
ஆமென்.
✠ சிலுவை அடையாளம்.
✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே!
*🙏🏻ஆமென் சேசு.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்