மங்களகாரமண விசுவாவசு ஆண்டு மார்கழி மாதம் தட்சிணயணம்
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை
பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
திருவாதவூர் மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை- பாடல் 19-
ஈசனே ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.. நீ எங்களுக்குத் தந்தையானவன்... அதனாலே இப்படி உன்னிடத்திலே கேட்க வேண்டியதானது.. !!!
திருமணத்தின் போது , மணமகளை, மணமகன் கையில் ஒப்புவித்து இனிமேல் இவள் உன் சொந்தம்.. நீ பார்த்துக் கொள் என விடுவரே அதனால் சொல்லி வைக்கிறோம் .
உன் அடியார் அல்லாதவரை யாம் சேரக் கூடாது.. உம் அடியாருக்கே யாம் மணமாதல் வேண்டும் !!
எங்கள் கரங்களும் கண்களும் உன் திருத் தொண்டுக்கானவை அவை வேறெந்த காரியங்களும் செய்விக்கலாகாது !!
அவ்வளவு தான் எங்களுக்கு வேண்டியது !!
இப்படியான மணவாழ்க்கை எங்களுக்கு நீ அருள் புரிந்து விட்டாயானால் , சூரியன் எந்த திசையில் வேண்டுமானால் உதித்துக் கொள்ளட்டும் !!!!!!
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் 🚩🕉🪷🙏🏻
#திருப்பாவை & திருவெம்பாவை #திருப்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி எழுச்சி 💮🪔🙏 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்