S.ANTHONY✝️YESUMARY
2.7K views
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹* *நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக!* *தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!* *உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக! உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக!* *உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக!* *உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!* (திருப்பாடல்கள் 20:1-5) *✝️ஜெபிப்போமாக :🛐* *எம்மோடு கூடவே இருக்கும் என் இனிய இயேசுவே! முடிவில்லா அன்பை என்னுள் வைத்து, என்னை தொடர்ந்து அன்பு செய்பவரே! உம்மை வாழ்த்தி போற்றி, ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.* *உம் பாதத்தில் அமரும் போதெல்லாம், என் வலுவின்மையை நீக்கி இனம்புரியாத ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருபவரே! உமது பிரசன்னம் தான் எனக்கு ஆறுதல். உமது அரவணைப்பு தான் எனக்கு தேறுதல். உமது பார்வை தான் எனக்கு பரவசம். உமது இறைவசனம் தான் எனக்கு ஆனந்தம்.* *இப்புதிய நாளில் எம்மை நினைவு கூர்ந்து இருமடங்கு ஆசீரும், மகிமையும் அளித்து, எல்லாவித நெருக்கடியினின்றும் எம்மை விடுவித்து, உமது அன்பை விட்டு பிரியாதிருக்க உம் அருளை பொழிந்தருளும்.* *ஆமென்.* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்