மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும்.
ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது.
இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல்.
எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம்.
கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்!
இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.- ஆதார் அர்ஜுனா தமிழக வெற்றி கழகம்
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴