ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
933 views
கட்சிப் பணம் ஒரு ரூபாய் என்றாலும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாதவர். தனக்கு வெகுமானமாகக் கிடைத்த பணத்தை எல்லாம் மக்கள் பணிகளுக்கே கொடுத்தவர். நல்லகண்ணுவின் பொது வாழ்வு பரிசுத்தமானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரது உயிர் பிரிந்தது. நல்லகண்ணுவின் மறைவு, அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எளிமையும், நேர்மையும் தான் அடையாளம் ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையுடன் கடைசி வரை வாழ்ந்தவர் நல்லகண்ணு. பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் போலவே, தனக்காகவும் குடும்பத்துக்காகவும் புத்தகங்களைத் தவிர எதையும் சேர்த்து வைக்காத தலைவர் நல்லகண்ணு. எளிமையும், நேர்மையுமே தனது அடையாளமாக வாழ்ந்து மறைந்தவர். மகள் காது குத்து ஒருமுறை தனது மகள் ஆண்டாளின் காது குத்து விழாவுக்கு எதுவும் வாங்காமல் வெறுங்கையுடன் போய் நின்றார் நல்லகண்ணு. தோடு வேண்டும் என்று கேட்ட பிறகு நண்பர்கள் சிலரின் உதவியோடு, கவரிங் கம்மலை வாங்கிக் கொடுத்தார். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தபோது, "இதையே குத்துங்கள் போதும்" என்று சொன்னவர் நல்லகண்ணு. 110 ரூபாய் ஒருமுறை அவருடைய மகள் மூன்று நாள்கள் கட்சி அலுவலகத்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கேயே தங்கி, சாப்பிட்டு வந்தார். பின்னர் தனது மகள் புறப்பட்டபோது, மூன்று நாள்கள் உணவுக்கான 110 ரூபாயை வசூலித்து கட்சி அலுவலகத்தில் கட்டியவர் நல்லகண்ணு. அவர் தன் கரம் தேடி வந்த பணத்தையெல்லாம் துச்சமாகவே பார்த்தவர். விருது பரிசுத் தொகையையும் பிறருக்கே அளித்து விடுவது நல்லக்கண்ணுவின் வழக்கம். ஒருமுறை தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியது. அதில் 50 ஆயிரத்தைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு. பணத்தை துச்சமாக மதித்த நல்லகண்ணு அதேபோல கடந்த 2022ஆம் ஆண்டில் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டது. அப்போது ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை மட்டும் வைத்துக் கொண்டவர், பரிசுத் தொகையான ரூ.10 லட்சத்துடன், தனது சொந்த நிதி ரூ.5,000 சேர்த்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கிவிட்டார். தன்னுடைய 80 ஆவது பிறந்த நாளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 1 கோடி நிதி வசூலித்துக் கொடுத்த நிலையில், அதைக் கட்சிக்கே மீண்டும் திருப்பித் தந்தவர் நல்லகண்ணு. தனது மாமனார் இறப்புக்கு அரசு இழப்பீடாகக் கொடுத்த தொகையை, வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தொகைக்கு அளித்தவர் நல்லகண்ணு. #😱கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்😢 #😱 கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்😢 #📢 பிப்ரவரி 25 முக்கிய தகவல் 🤗

More like this